அர்ச்சனாவுக்கு வக்காலத்து வாங்கி என்கிட்ட பேசாதே: சம்யுக்தாவை துவம்சம் செய்த ஆரி!

பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே பாலாஜி மற்றும் அர்ச்சனாவுக்கு வீட்டை பெருக்கும் பிரச்சனை வெடித்தது என்பதும், அதன்பின் தாய்ப்பாசம் என்ற ஆயுதத்தை பயன்படுத்தி பாலாஜியை அர்ச்சனா தந்திரமாக தன்னுடைய அணியில் சேர்த்து கொண்டார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் அர்ச்சனா மீண்டும் தனது வாடிக்கையான பெருக்கல் பிரச்சனையை தொடங்கியுள்ளார். கடந்த முறை அவரே கேப்டனாக இருந்ததால் வேல்முருகனை தூண்டிவிட்டவர் இம்முறை கேப்டன் சம்யுக்தாவை தூண்டிவிட்டு ஆரியை பெருக்க வருமாறு கூறுகிறார். இதனால் ஆரிக்கும் சம்யுக்தாவுக்கும் பிரச்சனை வருகிறது

ஒரு கேப்டன் ஒரு அணிக்கு சாதகமாக இருக்ககூடாது என்றும், தன்னால் இப்போது பெருக்க முடியாது என்றும், அர்ச்சனாவுக்கு வக்காலத்து வாங்கி கொண்டு ஏன் என்னிடம் பேசுகிறீர்கள் என்றும் சம்யுக்தாவை ஆரி துவம்சம் செய்ய, சம்யுக்தா வேறு வழியில்லாமல் திரும்பி செல்கிறார்.

அடுத்த வாரம் ஒவ்வொருவரின் ஃபேவரிஸம் குறித்து நெத்தியில அடிச்சமாதிரி சொல்வேன் என்று ஆரி கூறிய நிலையில் அதை இன்றுமுதல் ஆரம்பித்து, ஃபேவரிஸம் செய்யும் குருப்புகளை ஆரி தனது பாணியில் கையாள ஆரம்பித்துவிட்டார். அர்ச்சனா குருப்புக்கு இனிமேல் ஆரி ஒரு சிம்ம சொப்பனம் தான் என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது.

More News

ஒத்தை ஆளாக இருந்து 75 உயிர்களைக் காப்பாற்றிய சிறுவன்… குவியும் பாராட்டு!!!

மகாராஷ்டிராவில் 18 வயது சிறுவன் தனி ஆளாக இருந்து தன்னுடைய பெற்றோர் உட்பட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 75 நபர்களைக் காப்பாற்றி இருக்கிறான்.

தீபாவளிக்கு 'மாஸ்டர்' இல்லை: பொங்கலுக்காவது வருமா? தயாரிப்பாளர் விளக்கம்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேல் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் வரும் 10ஆம் தேதி திறக்க உள்ளன. ஏற்கனவே நாடு முழுவதும் திரையரங்குகள் திறந்து விட்ட

தேர்தல் கூட்டணி குறித்து அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன்!

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறார் என்பது தெரிந்ததே. அவரது கட்சி ஒரு பாராளுமன்ற தேர்தலை சந்தித்து விட்டது

திரையரங்குகள் திறந்தாலும் புதுப்படங்கள் வெளிவராது: பாரதிராஜா அறிவிப்பால் பரபரப்பு!

கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் வரும் பத்தாம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

பாலாஜி-சனம்ஷெட்டி ஆவேச மோதல்: வேடிக்கை பார்க்கும் அர்ச்சனா குரூப்!

பாலாஜியின் பின்புறத்தில் சனம்ஷெட்டி, எட்டி உதைத்ததால் பொங்கி எழுந்த பாலாஜி ஆத்திரத்துடன்  பேசி வருகிறார். பாலாஜி மற்றும் சனம்ஷெட்டி ஆகிய இருவரும் ஆவேசமாக சண்டை போட்டுக் கொண்டிருந்த