சந்தோஷமா இரு, நான் போயிருவேன்: குலுங்கி குலுங்கி அழுத சுசி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று சுசி மற்றும் பாலாஜி ஆகிய இருவரும் சிறையில் இருந்து வரும் நிலையில், சிறையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பாலாஜி புலம்பியதை 3வது புரமோவில் பார்த்தோம்.
இந்த நிலையில் இன்று ஒருநாள் தான், இனிமேல் நீ சந்தோஷமா இரு நான் போயிருவேன்’ என்று சுசி சொல்ல, அதற்கு பாலா ஒரு பாடலை பாடுகிறார். பின்னர் பாலா தூங்கும்போது அவருக்கு விசிறிவிடும் சுசி, பின்னர் ‘தென்பாண்டி சீமையிலே’ என்ற பாடலை பாடி கொண்டிருக்கும்போதே திடீரென குலுங்கி குலுங்கி அழுகிறார்.
ஏற்கனவே இந்த வார நாமினேஷன் பட்டியலில் இருக்கும் சுசி, குறைந்த வாக்குகள் பெற்றிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் சுசியே நான் போயிருவேன் என்று கூறியுள்ளார். மேலும் அவரால் எந்த எண்டர்டெயினும் பிக்பாஸ் வீட்டில் இல்லாததால் அவர் போனாலும் சுரேஷ் போனபோது வருத்தப்பட்டது போல் பார்வையாளர்கள் யாருக்கும் வருத்தம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்றைய மூன்று புரமோவிலும் ஒரு அன்சீன் வீடியோவிலும் பாலாஜியே இருப்பதால், இன்றைய நிகழ்ச்சியிலும் அவரது ஆக்கிரமிப்பு தான் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#BiggBossUNSEEN - இன்று இரவு 10:30 மணிக்கு நம்ம #VijayMusic ல.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #பிக்பாஸ் pic.twitter.com/OH2m5dN3He
— Vijay Music (@VijayMusicOffl) November 20, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments