வருண் தோளில் சாய்ந்து கண்ணீர் விடும் தாமரை!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக தாமரை மற்றும் பிரியங்கா இடையே வாக்கு வாதங்கள் பெருகிவரும் நிலையில் ஒரு கட்டத்தில் உடைந்து அழும் தாமரை வருண் தோளில் சாய்ந்து கண்ணீர் விடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இன்றைய அடுத்த புரமோவில் பிரியங்கா குறித்து சக போட்டியாளர்களிடம் தாமரை குற்றம் கூறுகிறார். என்னுடைய மனதை புண்படுத்த வேண்டும் என்றே முடிவு செய்து பிரியங்கா பேசுவதாக எனக்கு தெரிகிறது என்று கூறுகிறார். மேலும் ’உன்னிடம் ஆயிரம் குற்றங்கள் இருக்கு, நீ ஏன் அடுத்த ஆளை இப்படி பண்ணிக்கொண்டு இருக்கிறாய்? என்னை ஏன் வம்புக்கு இழுத்து கடுப்பைக் கிளப்புகிறாய்? அப்படி என்ன உனக்கு கிடைக்கப்போகிறது? என்று கூறுகிறார்.

இதேபோல் பிரியங்கா தனது தரப்பு நியாயத்தை கூறியபோது, தனக்கு என்று வரும்போது வேற மாதிரி செய்வார் தாமரை என்றும், ஆனால் அவளுக்கு அது புரியவில்லை என்றும் கூறுகிறார்.

இதன் பின்னர் ஒரு கட்டத்தில் தாமரை, வருண் தோளில் சாய்ந்து கண்ணீர் விடுவதும், அவருக்கு வருண் ஆறுதல் கூறுவதுமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மொத்தத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து இதுவரை கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த நற்பெயரை பிரியங்கா இழந்து விட்டார் என்று நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

More News

'பீஸ்ட்' நாயகி பூஜா ஹெக்டேவின் 'தூரிகை தூரிகை' பாடல் ரிலீஸ்!

தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே தெலுங்கில் பிரபாஸ் நடித்துவரும் 'ராதே ஷ்யாம்' என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 14ஆம்

மாலத்தீவில் கிளாமர் உடையில் கலக்கும் விஜய் பட நாயகி: வைரல் புகைப்படங்கள்!

விஜய் நடித்த 'நண்பன்' உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகின் முன்னணி நடிகையுமான இலியானா தனது சமூக வலைதளப் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ள

சிவகார்த்திகேயன் ஜோடியாகும் சூப்பர்ஹிட் படத்தின் நாயகி!

சூப்பர் ஹிட் படத்தின் நாயகி சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஜோடியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

மீண்டும் ரீஎண்ட்ரி ஆன சுஜா வருணி: எந்த படத்தில் தெரியுமா?

பிக்பாஸ் முதல் சீசனில் வைல்ட்கார்ட் எண்ட்ரியான நடிகை சுஜா வருணி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் திருமணமாகி குழந்தைக்கு தாயான சுஜா தற்போது சிறிய இடைவெளிக்குப்

'மாநாடு' வெற்றியால் மகிழ்ச்சி அடைந்த மோகன்லால்: காரணம் இதுதான்!

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான 'மாநாடு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பதும் இந்த படத்தின் வெற்றி தமிழ் திரை உலகிற்கே ஊக்கமளிக்கும் வகையில்