பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 15 போட்டியாளர்கள் இவர்கள் தானா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி அதில் கலந்து கொண்ட ஓவியா, ஹரிஷ் கல்யாண், ஆரவ், உள்பட சில போட்டியாளர்கள் திரையுலகில் வாய்ப்புகளை பெற்று முன்னணி இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் அனைவரும் எதிர்பார்த்த இந்த நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் நாளை முதல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மதுமிதா, பாத்திமா பாபு மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் கலந்து கொள்ளவிருப்பதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். சற்றுமுன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மற்ற போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது

இதன்படி 'காலா' நடிகை சாக்சி அகர்வால், மலேசிய நடிகர் மற்றும் இசையமைப்பாளர் முகன் ராவ், 'பருத்திவீரன்' சரவணன், பவர்ஸ்டார் சீனிவாசன், இயக்குனர் சேரன், 'நேர் கொண்ட பார்வை' நடிகை அபிராமி, டான்ஸ் மாஸ்டர் சாண்டி, 'விசில்' பட நாயகி ஷெரின், வனிதா விஜயகுமார், சாந்தினி தமிழரசன், கவின், தர்ஷன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதாக தெரிகிறது

60 கேமிராக்கள், அலங்காரமான செட், வண்ணமயமான விளக்குகள் அமைந்த சுற்றுச்சூழலில் 15 போட்டியாளர்கள் தினமும், சனி, ஞாயிறுகளில் கமல்ஹாசனும் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு நாளும் நடந்த நிகழ்வுகள் குறித்த விமர்சனங்களை உடனுக்குடன் பார்ப்போம்

More News

ஓவியாவின் அடுத்த படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிக்பாஸ் 3' நிகழ்ச்சி நாளை முதல் தொடங்கவிருக்கும் நிலையில் பிக்பாஸ் என்றால் அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது ஓவியாகத்தான் இருக்கும்

'பிகில்' படத்தின் அடுத்த அப்டேட்: அள்ளி வழங்கும் அர்ச்சனா

விஜய் நடித்து வரும் 'பிகில்' படத்தின் ஒரே ஒரு அப்டேட்டை கேட்டு விஜய் ரசிகர்கள் அந்த படத்தின் தயாரிப்பாளரிடம் கடந்த வாரம் வரை கெஞ்சி கொண்டிருந்தனர்.

மீம் கிரியேட்டர்ஸ்களை கூவிக்கூவி அழைத்த பிக்பாஸ் கமல்!

தொலைக்காட்சி நேயர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நாளை முதல் தொடங்கவுள்ளது. மீண்டும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில்

'நேர் கொண்ட பார்வை' படத்தில் நடிக்காதது ஏன்? டாப்ஸி விளக்கம்

அமிதாப் நடித்த 'பிங்க்' திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில் இந்த படம் தான் பாலிவுட்டில் நடிகை டாப்ஸியை முன்னணி நடிகையாக்க உதவியது.

துணை முதல்வருடன் பாண்டவர் அணி சந்திப்பு: 

நடிகர் சங்க தேர்தலை நாளை நடத்தலாம் என்றும், ஆனால் தேர்தலில் பதிவான வாக்குகள் நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை எண்ணக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டிருக்கும்