close
Choose your channels

கமல் தெரிவித்த மீன் கதை: ரேகா, சனம் வெளியேறுவது யார்?

Saturday, October 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று கமல்ஹாசன் தோன்றும் நிகழ்ச்சி என்பதால் காரசாரமான விவாதங்கள் மற்றும் சுவாரசியமான காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இன்றைய முதல் புரமோவில் அட்டகாசமான கெட்டப் உடன் தோன்றிய கமல்ஹாசன், சுரேஷின் ஹீரோயிஸம் குறித்து மறைமுகமாக தெரிவித்த நிலையில் இரண்டாவது புரமோவில் ரேகா மற்றும் சனம் குறித்து பேசியுள்ளது இருவரில் ஒருவர் வெளியேற வாய்ப்பு இருப்பதை அவர் பூடகமாக மீன் கதையுடன் தெரிவித்துள்ளார்.

’ஆளாளுக்கு ஒரு குரூப்பில் சேர்த்துக் கொண்டதால் பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் உருவாகி இருக்கின்றது. இந்த 17 போட்டியாளர்களை சேர சோழ பாண்டியர்கள் என்று பிரித்தோம் என்றால் அதில் ரேகா மற்றும் சனம் ஆகிய இருவரையும் பாண்டியன் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் மீன் கொடியை அப்படி தூக்கிப் பிடிக்கிறார்கள். பாண்டியர்கள் கொடியிலும் இரண்டு மீன்கள் இருக்கும்’ என்று புரிந்தும் புரியாமலும் ‘மைக்கேல் மதனகாமராஜன்’ பட டயலாக் போல் மீன் கதையை கமல் பேசியுள்ள புரோமோ தற்போது வெளியாகியுள்ளது

மொத்தத்தில் பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் உள்ளதை கமல்ஹாசன் ஒப்புக்கொண்டதை இந்த புரமோ பார்வையாளர்களுக்கு விளக்கியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.