அம்மி அரைக்க வைப்பேன்னு சொன்னது தப்பா? அர்ச்சனாவை ஆத்திரமூட்டிய பாலாஜி!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் சண்டை சச்சரவும் இடையிடையே நடந்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக அர்ச்சனா மற்றும் பாலாஜி இடையே நடைபெற்று வரும் சண்டையால் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது

இந்த நிலையில் இன்றைய 2-வது புரமோவில் அர்ச்சனா மிகவும் ஆவேசமாக பாலாஜியை பார்த்து, ‘அடுத்த வாரம் முழுவதும் அவங்களை அம்மியில் அரைக்க வைப்பேன்’ என்று கூறினார் என்று குற்றஞ்சாட்ட அதற்கு பாலாஜி ’எல்லாரையும் அம்மி அரைக்க வைப்பேன் என்று கூறினேன், இதுல என்ன தப்பு இருக்கு என்று அசால்ட்டாக கூற உடனே அர்ச்சனா இன்னும் அதிகமாக கோபம் அடைகிறார்.

இதனை அடுத்து அர்ச்சனாவின் ஆதரவாளர்களான ரியோ, நிஷா ஆகிய இருவரும் பாலாஜியை ரவுண்டு கட்ட, அதற்கு விளக்கம் அளித்த பாலாஜி, ‘நான் என்ன மரியாதை குறைவாக இப்போது பேசிவிட்டேன்’ என்று கூறி அவர்களையும் டென்ஷன் ஆக்கினார். இந்த சண்டையை சம்யுக்தா, ரம்யா, சனம் ஆகியோர் படுத்து கொண்டே எங்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் அமைதியாக பார்த்து கொண்டிருந்தனர். மொத்தத்தில் இன்றைய நிகழ்ச்சிக்கு கண்டெண்ட் கிடைத்துவிட்டதாகவே கருதப்படுகிறது

More News

'இப்ப போட்றா பால? சிம்பு வெளியிட்ட அதிரடி வீடியோ

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படத்தின் டைட்டில் 'ஈஸ்வரன்' என்றும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆயுத பூஜை தினத்தன்று வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது

நவம்பரில் கொரோனா தடுப்பூசி? பரபரப்பை ஏற்படுத்தும் மகிழ்ச்சி தகவல்!!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஒரே முடிவு தடுப்பூசி மட்டுமே

இந்த வார நாமினேஷனில் சிக்கிய 11 பேர்: தப்பிய ஐவர் யார் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும் அந்த நாமினேஷனில் சிக்கியவர்களில் ஒருவர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வார இறுதியில் வெளியேற்றப்படுவார்

என்கிட்ட தான் பிரச்சனை இருக்கோ? கன்பஃக்சன் அறையில் கதறி அழும் அனிதா

பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் நேற்று மொத்தம் உள்ள 16 போட்டியாளர்களில் 11 போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டனர் என்பது தெரிந்தது

லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய முருகன் திடீர் உயிரிழப்பு

திருச்சி லலிதா ஜுவல்லரி உள்ளிட்ட நகை கொள்ளை வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் திடீரென உயிரிழந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது