close
Choose your channels

அம்மி அரைக்க வைப்பேன்னு சொன்னது தப்பா? அர்ச்சனாவை ஆத்திரமூட்டிய பாலாஜி!

Tuesday, October 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் சண்டை சச்சரவும் இடையிடையே நடந்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக அர்ச்சனா மற்றும் பாலாஜி இடையே நடைபெற்று வரும் சண்டையால் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது

இந்த நிலையில் இன்றைய 2-வது புரமோவில் அர்ச்சனா மிகவும் ஆவேசமாக பாலாஜியை பார்த்து, ‘அடுத்த வாரம் முழுவதும் அவங்களை அம்மியில் அரைக்க வைப்பேன்’ என்று கூறினார் என்று குற்றஞ்சாட்ட அதற்கு பாலாஜி ’எல்லாரையும் அம்மி அரைக்க வைப்பேன் என்று கூறினேன், இதுல என்ன தப்பு இருக்கு என்று அசால்ட்டாக கூற உடனே அர்ச்சனா இன்னும் அதிகமாக கோபம் அடைகிறார்.

இதனை அடுத்து அர்ச்சனாவின் ஆதரவாளர்களான ரியோ, நிஷா ஆகிய இருவரும் பாலாஜியை ரவுண்டு கட்ட, அதற்கு விளக்கம் அளித்த பாலாஜி, ‘நான் என்ன மரியாதை குறைவாக இப்போது பேசிவிட்டேன்’ என்று கூறி அவர்களையும் டென்ஷன் ஆக்கினார். இந்த சண்டையை சம்யுக்தா, ரம்யா, சனம் ஆகியோர் படுத்து கொண்டே எங்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் அமைதியாக பார்த்து கொண்டிருந்தனர். மொத்தத்தில் இன்றைய நிகழ்ச்சிக்கு கண்டெண்ட் கிடைத்துவிட்டதாகவே கருதப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.