மீராவுக்கு பயம் வந்துருச்சு! சேரன் - ஷெரின் உரையாடல்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவாக நாமினேஷன் படலம் குறித்த வீடியோ சற்றுமுன் வெளியானது. ஆனால் திடீரென அந்த வீடியோ திடீரென நீக்கப்பட்டு அதற்கு பதிலாக புதிய புரமோ வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் ஷெரினும் சேரனும் மீரா, தர்ஷனிடம் புரபோஸ் செய்தது குறித்து பேசி வருகின்றனர். 'மீராவுக்கு என்ன ஆச்சு என ஷெரின் கேட்க அதற்கு சேரன், 'மீராவுக்கு வீட்டை விட்டு போய்விடுவோமோ என்ற பயம் வந்துவிட்டது. அவர் இந்த வீட்டில் தொடர்ந்து இருக்க நினைக்கின்றார்' என்று கூறுகிறார். 'கல்யாணம் வரைக்கும் எப்படி வந்தது இந்த விஷயம் என்று ஷெரின் கூற அதற்கு சேரன், 'சும்மா பேசிகிட்டு இருக்கும்போதே 'மச்சான் நான் உன்னை பண்ணிக்கிறேன், என் அம்மாகிட்ட வந்து பேசுன்னு எப்படி இந்த பெண்ணால் சொல்ல முடிகிறது. இந்த பெண் எப்படி மற்ற விஷயங்களை கையாள்வார். இவரால் எல்லோருக்கும் பிரச்சனை தான்' என்று கூறுகிறார்.

சேரன் சொன்னதுபோல் வலுவான போட்டியாளர் என்று கருதப்பட்ட வனிதாவையே மக்கள் தூக்கி எறிந்துவிட்டதால் மீராவின் மனதில் பயம் வந்துள்ளது. நேர்மையாக விளையாடினால் மட்டுமே மக்கள் மனதில் இடம்பெற முடியும் என்பதை மீரா புரிந்து கொண்டிருப்பார் என தெரிகிறது. ஆனாலும் காலம் கடந்த வந்த இந்த ஞானோதயத்தால் பலன் இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

வனிதாவை அடுத்து குறிவைக்கப்படும் மீரா: இந்த வார நாமினேஷன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று வெளியேற்றும் படலமும், திங்களன்று நாமினேஷன் படலமும் இருக்கும் என்பது தெரிந்ததே.

சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டுகிறது: பிரபல பாஜக பிரமுகர்

புதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது வன்முறையை தூண்டும் வகையில் இருந்ததாக பாஜக பிரமுகர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

கடாரம் கொண்டான் படத்தின் கரெக்டான ரன்னிங் டைம்!

சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'கடாரம் கொண்டான்' என்ற அதிரடி ஆக்சன் படம் வரும் 19ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

மோகன் வைத்யா சேஃப்: அப்போ வெளியேறுவது யார்?

பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறிக் கொண்டு இருப்பது தெரிந்ததே

வனிதா-தர்ஷன் பிரச்சனையின்போது ஒதுங்கி இருந்தது ஏன்? லாஸ்லியா விளக்கம்

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவை அதிகம் பேச வைத்து பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினார் கமல்ஹாசன். பிக்பாஸ் வீட்டில் பெரும்பாலும் அமைதியாக இருக்கும் லாஸ்லியா,