close
Choose your channels

மீராவுக்கு பயம் வந்துருச்சு! சேரன் - ஷெரின் உரையாடல்

Monday, July 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவாக நாமினேஷன் படலம் குறித்த வீடியோ சற்றுமுன் வெளியானது. ஆனால் திடீரென அந்த வீடியோ திடீரென நீக்கப்பட்டு அதற்கு பதிலாக புதிய புரமோ வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் ஷெரினும் சேரனும் மீரா, தர்ஷனிடம் புரபோஸ் செய்தது குறித்து பேசி வருகின்றனர். 'மீராவுக்கு என்ன ஆச்சு என ஷெரின் கேட்க அதற்கு சேரன், 'மீராவுக்கு வீட்டை விட்டு போய்விடுவோமோ என்ற பயம் வந்துவிட்டது. அவர் இந்த வீட்டில் தொடர்ந்து இருக்க நினைக்கின்றார்' என்று கூறுகிறார். 'கல்யாணம் வரைக்கும் எப்படி வந்தது இந்த விஷயம் என்று ஷெரின் கூற அதற்கு சேரன், 'சும்மா பேசிகிட்டு இருக்கும்போதே 'மச்சான் நான் உன்னை பண்ணிக்கிறேன், என் அம்மாகிட்ட வந்து பேசுன்னு எப்படி இந்த பெண்ணால் சொல்ல முடிகிறது. இந்த பெண் எப்படி மற்ற விஷயங்களை கையாள்வார். இவரால் எல்லோருக்கும் பிரச்சனை தான்' என்று கூறுகிறார்.

சேரன் சொன்னதுபோல் வலுவான போட்டியாளர் என்று கருதப்பட்ட வனிதாவையே மக்கள் தூக்கி எறிந்துவிட்டதால் மீராவின் மனதில் பயம் வந்துள்ளது. நேர்மையாக விளையாடினால் மட்டுமே மக்கள் மனதில் இடம்பெற முடியும் என்பதை மீரா புரிந்து கொண்டிருப்பார் என தெரிகிறது. ஆனாலும் காலம் கடந்த வந்த இந்த ஞானோதயத்தால் பலன் இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.