கஸ்தூரி வேலைக்கு ஆகாது! மீண்டும் கலாய்க்கும் கவின்

பிக்பாஸ் வீட்டில் வனிதா நுழைந்தவுடன் வீடே இரண்டு அணிகள் ஆனது என்பது தெரிந்ததே. ஆண்கள் அணியில் லாஸ்லியாவும், பெண்கள் அணியும் சேரனும் இருக்கும் நிலையில் இன்றைய முதல் புரமோவில் மதுமிதாவை ஆண்கள் அணி ரவுண்டு கட்டியது என்பதை பார்த்தோம். குறிப்பாக லாஸ்லியா ஆக்ரோஷமாக பொங்கி எழுந்தார்.

இந்த நிலையில் இன்றைய இரண்டாவது புரமோவில் கஸ்தூரி மீண்டும் தேவையில்லாமல் பேசி ஆண்கள் அணியை மடக்க நினைக்கின்றார். இதனையடுத்து சுதாரித்த கவின், தனது அணியினர்களை அழைத்து 'இவங்களோடு பேசறது வேலைக்கு ஆகாது' என்று கூறி உள்ளே செல்ல முயல்கிறார். மீண்டும் மீண்டும் கஸ்தூரி பேச முயற்சிக்கும்போது, 'உங்களோடு பேச விரும்பவில்லை' என்று வெளிப்படையாகவே கூறுகின்றனர்.

இதனையடுத்து 'அப்படி பார்த்தால் நீங்க நாலு பேரு கூட பேசியிருக்கவே கூடாது' என்று கஸ்தூரி கவினின் வீக் பாயிண்டை கொளுத்தி போட கவின் ஆவேசம் அடைவதுடன் இன்றைய இரன்டாவது புரமோ முடிவடைகிறது. மொத்தத்தில் வழக்கம்போல் இன்றும் பிக்பாஸ் வீட்டில் அனல் பறக்கும் என்றே தெரிகிறது.
 

More News

இப்படிப்பட்ட சரவணனையா வெளியே அனுப்பினார்கள்? நெட்டிசன்கள் ஆதங்கம்!

பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களில் ஒருவரான சரவணன், தனது கல்லூரி காலத்தில் நடந்த ஒரு ஜாலியான சம்பவத்தை கூறியதால் அநியாயமாக வெளியேற்றப்பட்டார்.

மதம் குறித்த சர்ச்சைக்குரிய கேள்விக்கு பதிலடி கொடுத்த மாதவன்

வேலை வெட்டி இல்லாத சில நெட்டிசன்கள் பிரபலங்களை வம்புக்கு இழுப்பதையே ஒரு முழு நேர தொழிலாக வைத்திருப்பது தெரிந்ததே. அந்த வகையில் நடிகர் மாதவன்

மூன்று தேசிய விருதுகள் பெற்ற படத்தின் ரீமேக்கில் பிரசாந்த்!

ஒருகாலத்தில் அஜித், விஜய்க்கு இணையான ஸ்டாராக இருந்த நடிகர் பிரசாந்த், கடந்த சில ஆண்டுகளாக திரையுலகில் இருந்து ஒதுங்கியுள்ளார். இந்த நிலையில் பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது

கஸ்தூரியை பங்கமாய் கலாய்த்து வரும் கவின் கூட்டணி! 

பிக்பாஸ் வீட்டில் வைல் கார்ட் எண்ட்ரி ஆக வந்த கஸ்தூரி நிகழ்ச்சியை மேலும் பரபரப்பாகவும், சுவராசியமாகவும் மாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது

இத்தனை நாள் வேற்றுகிரகத்திலா இருந்தீங்க! மதுமிதாவை வறுத்தெடுத்த லாஸ்லியா

பிக்பாஸ் வீட்டில் வனிதா வந்த பின்னர் ஒருபக்கம் சண்டை சச்சரவு வந்தாலும், இதுநாள் அமைதியாக இருந்த அபிராமி, லாஸ்லியா ஆகிய இருவரையும் பொங்கி எழ வைக்கும் ஒரு நல்ல விஷயமும் நடந்துள்ளது