close
Choose your channels

இத்தனை நாள் வேற்றுகிரகத்திலா இருந்தீங்க! மதுமிதாவை வறுத்தெடுத்த லாஸ்லியா

Friday, August 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் வனிதா வந்த பின்னர் ஒருபக்கம் சண்டை சச்சரவு வந்தாலும், இதுநாள் அமைதியாக இருந்த அபிராமி, லாஸ்லியா ஆகிய இருவரையும் பொங்கி எழ வைக்கும் ஒரு நல்ல விஷயமும் நடந்துள்ளது

நேற்றைய நிகழ்ச்சியில் இந்த வீட்டில் உள்ள ஆண்கள், பெண்களள யூஸ் செய்ததாக அபாண்டமான ஒரு பழியை மதுமிதா சுமத்த, அதற்கு கவின் சரியான பதிலடி கொடுத்தார். அவர், 'நீங்க மொத்தமா ஆம்பளைங்க பொம்பளைங்கல யூஸ் பண்ணிக்கிறாங்கன்னு சொன்னீங்க, வனிதா வந்த பின்னர்தான் இப்படி பேசுறீங்க. இவ்வளவு நாள் கம்முன்னு அமைதியாத்தான இருந்தீங்க. வீட்ல இருக்குற எல்லா ஆம்பளங்களையும் பொம்பளைங்கள யூஸ் பண்ணுனாங்கன்னா, தர்ஷன் யாரை யூஸ் பண்ணினான், சேரன் யாரை யூஸ் பண்ணினாறு? என்று கவின், மதுமிதாவை விளாசி தள்ளுகிறார்.

அதேபோல் அமைதி, அடக்கம், புன்சிரிப்பு என வலம் வந்து கொண்டிருந்த லாஸ்லியாவும் ஆவேசமானார். 'வனிதா வந்து ஒரு வார்த்தை சொன்ன பின்னர் பொங்கி எழுந்திட்டிங்க, இத்தனை நாள் என்ன வேற்று கிரகத்திலா இருந்தீங்க? என மதுமிதாவை லாஸ்லியா வறுத்தெடுக்க மதுமிதா அதிர்ச்சியில் உறைகிறார். மொத்தத்தில் பிக்பாஸ் வீட்டில் கவின், தர்ஷன், முகின், சாண்டி மற்றும் லாஸ்லியா கூட்டணி ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துவிட்டதால் வனிதாவின் வரவும் பெண்களை காப்பாற்ற போவதில்லை என்றே தெரிகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.