லாஸ்லியாவுக்காக சாண்டியுடன் மோதுகிறாரா கவின்?

கவின், சாண்டி இருவருமே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னரே நெருங்கிய நண்பர்கள். ஐந்து வருடங்கள் நட்பாக இருந்ததால்தான் பிக்பாஸ் வீட்டிலும் இருவர் தலைமையில் சீக்கிரமாக ஒரு கேங் உருவானது. இந்த நிலையில் சாக்சியுடன் கவின் நெருக்கமாக இருந்தபோதும், லாஸ்லியாவை காதலித்தபோதும் கவினை சாண்டி ஒரு லிமிட்டுக்கு மேலே போகாதே என கண்டித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இந்த வாரம் லாஸ்லியா கேப்டன் என்பதால் சாண்டியை வேலை செய்ய வருமாறு லாஸ்லியா அழைக்கின்றார். அப்போது சாண்டி, ‘நீ கேப்டனா இருக்கும்போது மட்டும் வேலை செய்ய கூப்பிடறே’ என கலாய்க்கின்றார். இதனால் அப்செட் ஆன லாஸ்லியா, ‘நீ வேலையே செய்ய வேண்டாம்’ என கோபத்துடன் சென்றுவிடுகிறார். தான் விளையாட்டுக்கு சொன்னதை சீரியஸாக லாஸ் எடுத்து கொண்டதாக சாண்டி வருத்தப்படுகிறார். அப்போது கவின், ‘நீ ஜாலி ஜாலின்னு டபார்ன்னு மனம் புண்படும்படி பேசுகிறாய்' என கவின், சாண்டியுடன் வருத்தப்படுகிறார்.

இதேபோன்று பல புரமோக்களில் கவின் பிறருடன் சண்டை போடுவது போல் இருந்தாலும், அது நிகழ்ச்சியின்போது புஸ்வானமாகிவிடுவதுண்டு. அந்த வகையில் இந்த சண்டையும் போய்விடுமா? அல்லது சீரியஸ் ஆகுமா? என்பதை முழு நிகழ்ச்சியையும் பார்த்தால்தான் தெரியும். ஆனால் அதே நேரத்தில் நேற்று பழக்கமான ஒரு பெண்ணுக்காக பல வருட நண்பனை கவின் இவ்வாறு பேசலாமா? என நெட்டிசன்களும் குறை சொல்லி வருகின்றனர். இந்த வாரம் வனிதா வெளியேறுவது உறுதி என்றாலும் வரும் வாரங்களில் மக்கள் செல்வாக்கை கவின் இழக்காமல் இருக்க இதுபோன்று பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றே கருதப்படுகிறது.

More News

சென்னை வந்ததும் முகின் தாயார் பார்த்தது யாரை தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் உறவினர்களின் வருகை வாரம் என்ற நிலையில் முகினை பார்ப்பதற்காக மலேசியாவில் இருந்து அவரது தாயாரும் சகோதரியும் சென்னைக்கு வருகை தந்துள்ளனர். 

பிக்பாஸ் வீட்டில் செண்டிமெண்ட் ஆரம்பம்! உறவினர்கள் வருகை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் குடும்பத்தினர்களை பிரிந்து வாடும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்த போட்டியாளர்களின் உறவினர்கள் சிறப்பு விருந்தினர்களாக

கவின் பேச்சால் சேரன் டென்ஷன், சுதாரிப்பாக இருக்கும் லாஸ்லியா!

கடந்த சில வாரங்களாக கவின் - லாஸ்லியா காதல் பரபரப்பாக பிக்பாஸ் வீட்டில் ஓடிக்கொண்டிருந்தபோது, கவினை தனியாக அழைத்து பேசிய சேரன், 'இப்போதைக்கு இருவரும் விளையாட்டில் கவனம்

ஏ.ஆர்.ரஹ்மான் கோரிக்கை ஏற்கப்படும்: தமிழக அமைச்சர் அறிவிப்பு

ஏ.ஆர்.ரஹ்மானின் கோரிக்கையை ஏற்று சென்னை எழும்பூரில் இசை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.

'சைத்தான்' இயக்குனரின் அடுத்த படத்தில் அந்த கால ஆக்சன் ஹீரோ!

விஜய் ஆண்டனி நடித்த 'சைத்தான்' மற்றும் சிபிராஜ் நடித்த 'சத்யா' ஆகிய திரைப்படங்களை இயக்கிய பிரதீப் கிருஷ்ணராஜ் தற்போது மூன்றாவது படத்திற்கு தயாராகியுள்ளார்.