ஒரே வார்த்தையில் ஷெரினை வெட்கப்பட வைத்த தர்ஷன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார டாஸ்குகள் அனைத்தும் போட்டியாளர்களை கடும் சோதனைக்கு உள்ளாக்கி வருகிறது. இந்த வாரத்தில் அதிக புள்ளிகள் எடுப்பவர் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார் என்பதால் போட்டியாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு அதிக புள்ளிகள் எடுக்க தீவிரமாக விளையாடி வருகின்றனர். இருப்பினும் கவின், லாஸ்லியா ஆகிய இருவரும் இடையிடையே போட்டிகளில் இருந்து கவனம் சிதறுவதாக் தெரிகிறது

குறிப்பாக போட்டியின் இடையில் லாஸ்லியாவுக்கு காயம் ஏற்பட்டால் கவின் உடனே துடித்து அவருக்கு ஆறுதலாக இருப்பது மற்ற போட்டியாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. குறிப்பாக இன்றைய டாஸ்க்கில் லாஸ்லியாவிடம் கவின் அவ்வப்போது டாஸ்குகள் இடையே பேசிக் கொண்டிருப்பது ஷெரினை எரிச்சலுக்கு உள்ளாக்குகிறது. இவர்கள் இங்கே டாஸ்குகள் விளையாட வந்திருக்கின்றார்களா? அல்லது வேறு எதற்கும் வந்திருக்கின்றார்களா? என்று ஆவேசமாக கேள்வி எழுப்புகிறார்.

மேலும் தர்ஷனிடம் தனிமையில், ‘எல்லோருமே அடி வாங்கிக் கொண்டுதான் டாஸ்குகளை விளையாடி வருகிறோம். இவர்கள் மட்டும் அடிவாங்குவது போல் பில்டப் செய்கிறார்கள் என்று கூற அதற்கு தர்ஷன் கூறும் ஒரே வார்த்தையில் ஷெரின் கோபமும் ஆவேசமும் அடங்குகிறது. ’ஒரு அழகான பொண்ணு கோபப்படலாமா? என்பதுதான் ஷெரினை பார்த்து தர்ஷன் கூறியது. இதனை கேட்டது ஷெரின் முகத்தில் கோபம் மாயமாய் மறைந்து திடீரென வெட்கமும் புன்சிரிப்பும் வருகிறது. தர்ஷனின் இந்த அணுகுமுறையே அவர் இந்த போட்டியில் டைட்டில் வெல்ல தகுதியானவர் என்பதை குறிப்பிடுகிறது

More News

சமந்தா குடும்பத்திற்கு சொந்தமான பண்ணை வீட்டில் மனித எலும்புக்கூடு: அதிர்ச்சி தகவல் 

பிரபல தெலுங்கு நடிகரும் நடிகை சமந்தாவின் மாமனாருமான நாகார்ஜூனாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் மனித உடல் ஒன்று அழுகிய நிலையில் எலும்புக் கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ளது

என்ன நியாயமா விளையாடிறீங்க எல்லோரும்? கவின் ஆவேசம்

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த முதல் நாளில் இருந்து காதல், காதல் காதல் தவிர வேறு எதுவுமே இல்லை என்ற அளவில் விளையாடிக் கொண்டிருந்த கவின், தற்போது கடந்த 2 நாட்களாக போட்டியை வெல்ல வேண்டும்

தமிழிசைக்கு நேரில் வாழ்த்து கூறிய தமிழ் திரையுலகின் நட்சத்திர ஜோடி!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெலுங்கானா மாநில கவர்னராக பொறுப்பேற்றுக்கொண்டார்

சென்னையில் விடிய விடிய கனமழை: பள்ளிகள் இயங்குமா?

சென்னை மட்டுமின்றி சென்னையின் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் இன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு

ஒரே கேரக்டரில் நடிக்கும் நயன்தாரா -உதயநிதி!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரித்து வரும் 'நெற்றிக்கண்' என்ற படத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.