சாக்சி வெளியேறாதது ஏன்? ரேஷ்மாவிடம் விளக்கிய கமல்!

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் கவின், லாஸ்லியா மட்டுமன்றி ஒட்டுமொத்த போட்டியாளர்கள் அனைவரையும் வெறுப்பேற்றிய சாக்சி கண்டிப்பாக வீட்டை விட்டு வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அவருக்கு பார்வையாளர்களிடமிருந்து மிகக் குறைவான வாக்குகளே கிடைத்ததாகவும் செய்திகள் வெளிவந்ததால் நேற்று நேற்று சாக்சி வெளியேறுவார் என்று பலர் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் எதிர்பாராததை எதிர்பார்க்க வைக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாட்சிக்கு பதிலாக நேற்று ரேஷ்மா வெளியேற்றப்பட்டார்.

ரேஷ்மா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதை பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் நம்பவில்லை. முதல் முறையாக நாமினேஷன் சிக்கிய ரேஷ்மா வெளியேற்றப்பட்டது பெரும் ஆச்சரியத்தை அளித்தது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரேஷ்மாவுடன் கமல்ஹாசன் இது குறித்து விளக்கம் அளித்தார்.

பிக்பாஸ் மூன்று சீசன்களில் மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெளியேறுவது ரேஷ்மா தான் என்றும் ரேஷ்மாவிற்கு ஒரு கோடியே 30 லட்சம் வாக்குகள் கிடைத்ததாகவும், அவருக்கு அடுத்தபடியாக இருந்த போட்டியாளருக்கு ஒரு கோடியே 32 லட்சம் வாக்குகள் கிடைத்ததாகவும் கூறினார். ரேஷ்மாவுக்கு அடுத்தபடியாக உள்ள போட்டியாளர் சாக்சி தான் என்று கணிக்கப்படுகிறது.

மொத்தத்தில் வெறும் இரண்டு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ரேஷ்மா வெளியேற்றப்பட்டதாக கமல்ஹாசன் கூறினாலும் பார்வையாளர்கள் அதை நம்பத் தயாராக இல்லை. இன்னும் ஒரு சில வாரங்கள் பிக் பாஸ் வீட்டில் சாக்சி இருந்தால்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரசியமாகவும், சண்டை சச்சரவாகவும் இருக்கும் என்பதை பிக்பாஸ் திரைக்கதை குழுவினர் நினைத்திருக்கலாம் என கருதப்படுகிறது.
 

More News

ஆகஸ்ட் 11 முதல்... ஜிவி பிரகாஷின் அடுத்த பட அப்டேட்

இந்த ஆண்டு 'சர்வம் தாளமயம்', 'குப்பத்து ராஜா', 'வாட்ச்மேன்' ஆகிய மூன்று திரைப்படங்கள் ஏற்கனவே ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள நிலையில்

தனுஷ் வெளியிட்ட 'சூப்பர் குட் பிலிம்ஸ்' நிறுவனத்தின் அடுத்த பட டைட்டில்!

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 90ஆவது படைப்பாக தயாரிக்கும் திரைப்படத்தில் ஜீவா மற்றும் அருள்நிதி நடிக்க உள்ளதாக

சூர்யாவின் 'காப்பான்' ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

சூர்யா நடிப்பில் இயக்குநர் கேவி ஆனந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'காப்பான்'.

சேரனை அழைத்து வாருங்கள் விஜய்சேதுபதி: ஒரு இயக்குனரின் வேண்டுகோள்

பிக்பாஸ் வீட்டில் சேரனை சரவணன் மரியாதைக்குறைவாக பேசியதும், கமல் அறிவுரைக்கு பின்னர் சேரனிடம் சரவணன் மன்னிப்பு கேட்டதும் முடிந்து போன விஷயமாக கருதப்படுகிறது.

ஒரே நாளில் இரண்டு படங்களின் விழா! விஜய்சேதுபதி அசத்தல்

கோலிவுட் திரையுலகில் ஒரே நேரத்தில் அதிக திரைப் படங்களில்  நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. எனவே தான் இரண்டு மாதத்திற்கு ஒரு விஜய்சேதுபதி படம் வெளி வருவது