close
Choose your channels

ஒரே நாளில் இரண்டு படங்களின் விழா! விஜய்சேதுபதி அசத்தல்

Saturday, August 3, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் ஒரே நேரத்தில் அதிக திரைப் படங்களில் நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. எனவே தான் இரண்டு மாதத்திற்கு ஒரு விஜய்சேதுபதி படம் வெளி வருவது வாடிக்கையாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது சுமார் 8 படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி இன்று அவர் நடிக்கவுள்ள அடுத்த படமான 'துக்ளக் தர்பார்' என்ற படத்தின் பூஜையில் கலந்துகொண்டார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது.

இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் இயக்குனர் பாலாஜி தரணிதரன் வசனத்தில் கோவிந்த் வசந்தா இசையில் உருவாகும் இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அதிதிராவ் ஹைத்ரி நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் விஜய்சேதுபதி நடித்து முடித்துள்ள இன்னொரு திரைப்படமான 'சங்கத் தமிழன்' என்ற படத்தின் டப்பிங் பணிகள் இன்று தொடங்கியுள்ளது. இதற்கான பூஜையிலும் விஜய் சேதுபதி கலந்துகொண்டார். விஜய்சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பேத்ராஜ், சூரி, நாசர் நடித்துள்ள இந்த படத்தை விஜய்சந்தர் இயக்கியுள்ளார். விவேக் மெர்வின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை விஜயா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஒரே நாளில் ஒரு படத்தின் துவக்க விழாவிலும், டப்பிங் பட விழாவிலும் விஜய் சேதுபதி கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.