வீட்டுக்கு போகணுமா? வின் பண்ணனுமா? அர்ச்சனாவுக்கு வேற லெவல் கேள்வி கேட்ட ஆஜித்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமைதியாக இருக்கும் போட்டியாளர் என்று ஆஜித்தை பலர் விமர்சனம் செய்தாலும் பேச வேண்டிய நேரத்தில் மிகச்சரியாக, சரியான அளவுடன் சொல்ல வேண்டிய கருத்தை சொல்பவராக ஆஜித் இருக்கின்றார் என்ற ஒரு பாசிட்டிவ் விமர்சனமும் அவர் மீது உண்டு

இதற்கு உதாரணமாக கடந்த வாரம் நடந்த கால்சென்டர் டாஸ்க்கில் ரியோ கேட்ட கேள்விகளுக்கு புத்திசாலித்தனமாக பதில் கூறியதோடு டாஸ்க்கை முடித்த விதமும் ஆச்சரியமாக இருந்தது. இதற்காக ரியோவின் குரூப்பில் உள்ளவர்களே ஆஜித்தை பாராட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று அர்ச்சனாவிடம் ஆஜித் கேள்வி கேட்கும் கால்சென்டர் நடைபெறுகிறது. இதில் ’இந்த கேம் ஷோவில் நீங்கள் வரும்போது ஒரு வலிமையான போட்டியாளராக வந்தீர்கள். கமல் சார் அவர்களிடம் கூட நீங்கள் பேசும்போது நான் இன்னும் என்னுடைய நக்கல்களை காட்டவில்லை என்று கூறினீர்கள். நீங்கள் வரும்போது உங்களிடம் நிறைய நக்கல்கள் தெரிந்தது. ஆனால் போகப் போக அது குறைந்துவிட்டது போன்று எனக்கு ஒரு உணர்வு ஏற்படுகிறது

மேலும் அடிக்கடி நீங்கள் வீட்டுக்கு போக வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றீர்கள். ஆனால் டாஸ்க் எல்லாம் நான் பார்த்தவரைக்கும் நீங்கள் வேற லெவலில் செய்து வருகிறீர்கள். இப்போது என்னுடைய கேள்வி ஒன்றே ஒன்றுதான், நீங்கள் உண்மையிலேயே வீட்டுக்கு போக வேண்டுமா? அல்லது இந்த ஷோவை வின் பண்ண வேண்டுமா? என்ற கேள்வியை ஆஜித் எழுப்பியுள்ளார்

ஆஜித்தின் இந்த வேற லெவல் கேள்விக்கு அர்ச்சனா என்ன பதில் கூறுகிறார் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பொறுத்திருந்து பார்ப்போம்

More News

ரஜினிக்கு அரசியலை விட இதுதான் ரொம்ப முக்கியம்: கமல்ஹாசன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று தனது ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் என்றும், அந்த சந்திப்பின்போது அரசியலுக்கு வருவது குறித்து

என்னோட கான்செப்ட் இதுதான்: கால்சென்டர் டாஸ்க் குறித்து பாலாஜி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய கால்சென்டர் டாஸ்கில் ஆரி மற்றும் பாலாஜி போன் மூலம் உரையாடும் முதல் புரமோவை ஏற்கனவே பார்த்தோம். பாலாஜியின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு

பலமுறை கேலி செய்த அர்ச்சனாவை ஒரே மீம்ஸில் பங்கம் செய்த சுரேஷ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக அர்ச்சனா நுழைந்த முதல் நாளில் ஒவ்வொருவரைப் பற்றி கருத்துக் கூறிய போது சுரேஷை மட்டும் அவர் படுத்திருந்த விதம் குறித்து கேலி செய்து சிரித்தார்

நடிகர் சிவகுமாருக்கு கொரோனாவா? பதில் சொல்லும் புகைப்படம்!

பழம்பெரும் நடிகரும் நடிகர்கள் சூர்யா கார்த்தியின் தந்தையுமான சிவகுமாருக்கு கொரனோ தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும்

அமெரிக்காவில் ஒரு ஐபிஎல் தொடர்: மிகப்பெரிய தொகையை முதலீடு செய்யும் பிரபல நடிகர்!

இந்தியாவில் ஐபிஎல் போட்டி என்பது ஒவ்வொரு ஆண்டும் ஒரு திருவிழா போல் நடந்து கொண்டிருக்கிறது என்பதும் கோடிக்கணக்கான பணம் இதில் வருவாய் கிடைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.