close
Choose your channels

என் விளையாட்டு இனிமே எப்படி இருக்கும்ன்னு பாருங்க: அர்ச்சனாவிடம் சவால்விட்ட ஆரி!

Tuesday, December 15, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் எந்த டாஸ்க் கொடுத்தாலும் அதனை போட்டியாளர்கள் ஸ்போர்ட்டிவ்வாக விளையாடாமல் பிரச்சனை செய்து விளையாடுவதே போட்டியாளர்களின் எண்ணமாக உள்ளது

இந்த நான்காவது சீசனில் ஒரு டாஸ்க் கூட சுமூகமாக விளையாடியதாக தெரியவில்லை என்பதுதான் பார்வையாளர்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கோழிப் பண்ணை டாஸ்க்கிலும் கோழிகள் அணி மற்றும் நரிகள் அணிகளுக்கு இடையே பிரச்சினை வந்து உள்ளது

குறிப்பாக ஆரி மற்றும் அர்ச்சனா இந்த டாஸ்க் எப்படி விளையாடுவது என்பது குறித்து காரசாரமாக வாதம் செய்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் ’எப்படித்தான் விளையாட வேண்டும் என்று சொல்லுங்கள்’ என அர்ச்சனா ஆவேசமாக கேட்க ’நான் எப்படி விளையாடுகிறேன் என்று பாருங்கள்’ என்று சவால் விடும் வகையில் ஆரி சொல்கிறார்

இந்த வாதத்தின்போது ரம்யா மட்டும் அர்ச்சனாவுக்கு ஆதரவாக பேசி வருகிறார் என்பதும் மற்ற போட்டியாளர்கள் வழக்கம்போல் அமைதியாக நின்று வேடிக்கை பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த டாஸ்க்கில் வெற்றி பெறுபவருக்கு ஸ்பெஷல் பவர் இருப்பதால் அந்த ஸ்பெஷல் பவரை பெறுவதற்கு அர்ச்சனா செய்யும் முயற்சிகளும் அதனை முறியடிக்க ஆரி செய்யும் முயற்சிகளும் டாஸ்க்கில் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.