ராம்ஸூ, உனக்கு வெளியே போனா விஷப்பாட்டில் தான்: ரம்யாவை சீண்டிய பாலா

பிக்பாஸ் வீட்டில் எவிக்ட் ஆன போட்டியாளர்கள் கிட்டத்தட்ட அனைவரும் மீண்டும் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் நிலையில் அவர்களிடம் இருந்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற ஆறு போட்டியாளர்களும் பல விஷயங்களை கறந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது

ஒவ்வொரு போட்டியாளர்கள் குறித்து வெளியில் பார்வையாளர்கள் கமெண்ட் செய்யும் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை உள்ளே சென்ற போட்டியாளர்கள் கூறியிருப்பதால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற ஆறு பேர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்றைய எபிசோடில் பாலாஜி மற்றும் ரம்யா ஆகிய இருவரும் தனிமையில் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ’என்ன ராம்ஸூ, உனக்கு டைட்டில் பட்டம் கொடுப்பாங்கன்னு பார்த்தா வெளியில் போனா விஷ பாட்டில் தான் கொடுப்பாங்க போல இருக்கே’ என்று கூற அதற்கு ரம்யா ’அதெல்லாம் வராது கவலைப்பட வேண்டாம் சந்தோசமாக இருப்போம்’ என்று கூறுகிறார்.

அப்போது பாலா, ‘எனக்கு எதிரி வெளியில இல்ல பக்கத்துல தான் இருந்திருக்கிறார்கள் என்று இப்போதுதான் எனக்கு தெரியவந்தது என்று கூற அப்போது ரம்யா ‘நானா உங்க எதிரி’ என்று கேட்க அதற்கு பாலா ’ஆமாம்’ என்று தலை காட்டுகிறார். அதற்கு ரம்யா ’அதெல்லாம் ஒரு மேட்டர் ஆகவே இருந்திருக்காது’ என்று கூறி சமாளிக்கிறார்.

பிக்பாஸ் வீட்டிற்கு வந்தவர்களில் யாரோ ஒருவர்தான் பாலாஜியிடம் ரம்யாவுக்கு வெளியில் விஷ பாட்டில் என்ற பட்டப் பெயர் ஏற்பட்டுள்ளது என்றும் பாலாஜியின் உண்மையான எதிரி ரம்யா தான் என்றும் கூறி இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
 

More News

என்னால ஏற்பட்ட நெகட்டிவ், எல்லாம் பிரபா தாங்குனான்: ஆரியிடம் புலம்பிய அனிதா!

பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே பல போட்டியாளர்கள் விருந்தினர்களாக வந்திருந்த நிலையில் இன்றைய எபிசோடில் உள்ளே வருகிறார் அனிதா. அனிதா தந்தை காலமானது குறித்து ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஆரிக்கு 5வது இடம்: பரபரப்பு தகவல்

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 4வது சீசனின் இறுதிப்போட்டி இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெற உள்ளது என்பதும் இந்த இறுதிப் போட்டிக்கு 6 பேர் தகுதி பெற்றுள்ளனர் என்பது தெரிந்ததே.

தனுஷ்-செல்வராகவன் படத்தின் மாஸ் டைட்டில்-பர்ஸ்ட்லுக் ரிலீஸ்

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்கள் உருவாக இருப்பதாகவும் அதில் ஒன்று கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்கும் திரைப்படம் என்றும் வெளியான செய்தியை

'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பில் இணைந்த மேலும் இரு பிரபலங்கள்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 8 மாதங்களாக நிறுத்தப்பட்டு இருந்தது.

விஜய்க்கு இதுவொரு போக்கிரி பொங்கல், மாஸ்டர் பொங்கல்: பிரபல இயக்குனர் பாராட்டு!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் இன்று வெளியாகி பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்களையும் ஒருசில கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது