close
Choose your channels

என்னால ஏற்பட்ட நெகட்டிவ், எல்லாம் பிரபா தாங்குனான்: ஆரியிடம் புலம்பிய அனிதா!

Wednesday, January 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே பல போட்டியாளர்கள் விருந்தினர்களாக வந்திருந்த நிலையில் இன்றைய எபிசோடில் உள்ளே வருகிறார் அனிதா. அனிதா தந்தை காலமானது குறித்து ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த சக போட்டியாளர்கள் அவருக்கு ஆறுதல் கூறுகின்றனர். அனிதாவின் குடும்பத்திற்கு ஏற்பட்ட இழப்பிற்கு அனுதாபம் தெரிவிப்பதாக பிக்பாஸூம் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆரியிடம் மனம் விட்டு பேசிக் கொண்டிருந்த அனிதா, ‘உங்களிடம் நான் கத்தியது தவறு என்பதை நான் உணர்ந்துவிட்டேன், அதற்கு நான் மன்னிப்பும் கேட்டுவிட்டேன். ஆனால் அந்த மன்னிப்பையும் புரிந்து கொள்ளாமல் அதையும் கேலி, கிண்டல் செய்கின்றனர். என்னால் ஒரே நேரத்தில் அப்பா இறந்தது மற்றும் இந்த நெகட்டிவ் கமெண்ட்ஸ் ஆகிய இரண்டையும் சமாளிக்க முடியவில்லை. ஒரு பக்கம் பிரபா எல்லா நெகட்டிவ்ஸ்களையும் தாங்கினான். அவனுக்கு அவ்வளவு நெகட்டிவ் மெசேஜ்கள் வந்தன என ஆரியிடம் அனிதா புலம்பி தள்ளிவிட்டார்.

இதனையடுத்து ஆரி, ‘நம்மை ஒருத்தர் குறை சொன்னால் அதை எடுத்து கொண்டு திருத்தி கொள்ளத்தான் நம்மால் முடியும். அதற்கு மேல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. பிளஸ் இருந்தாலும் அதை எடுத்து தனியாக வைத்துவிட்டு சரி எது, தவறு எது என நாமே முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.