close
Choose your channels

பொட்டியில ஒரு கோடி ரூபாய் இருந்தால் கூட எடுக்க மாட்டேன்: சொன்னது யார் தெரியுமா?

Thursday, January 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற 6 போட்டியாளர்களுக்கு மட்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட தொகை பெட்டியில் வழங்கப்படும் என்றும் அந்த தொகையை இந்த போட்டியில் வெற்றி பெற மாட்டோம் என்று சிறிதளவாவது நினைக்கும் போட்டியாளர் எடுத்துக் கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறலாம் என்றும் இது அவர்களுக்கான ஒரு வாய்ப்பு என்றும் அறிவிக்கப்படுகிறது

இதனை அடுத்து கார்டன் ஏரியாவில் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றவர்களில் ஒருவரான பாலாஜி கேமரா முன்பு நின்று பேசுகிறார். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னால் இது போன்ற ஒரு பெட்டியை வைத்திருந்தால் நான் உடனே எடுத்துக்கொண்டு வெளியே போய் இருப்பேன்

ஆனால் இப்போது என்னை நம்பி பலரும் வாக்களித்துள்ளனர். இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற வைத்துள்ளனர். அந்த பெட்டியில் ஒரு கோடி ரூபாய் இருந்தாலும் நான் எடுக்க மாட்டேன். வெற்றி பெறுவது தோல்வி அடைவது என்பது இரண்டாவது விஷயம். என்னை நம்பி ஓட்டு போட்டவர்களுக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன். அதனால் களத்தில் இறங்கி விளையாடப் போகிறேன். அனைவருக்கும் மீண்டும் எனது பொங்கல் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்

பாலாஜி உறுதிபட பணப்பெட்டியை எடுக்க மாட்டேன் என்று கூறியதை அடுத்து அவரை நம்பி வாக்களித்தவர்களுக்கு அவர் செய்யும் நன்றியாகவே இது பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.