close
Choose your channels

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 போட்டியாளருக்கு கொரோனா: பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சி என்ன ஆகும்?

Thursday, May 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் கேப்ரில்லா என்பது தெரிந்ததே. இவர் கடைசி நேரத்தில் ரூபாய் ஐந்து லட்சத்தை பெற்றுக்கொண்டு போட்டியில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் சமீபத்தில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து தான் அனைத்து சிகிச்சை முறைகளையும் மேற்கொண்டு தனிமைப்படுத்தி கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தான் குணமடைய வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்து கொள்வதாகவும்,தயவு செய்து அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ’இதுவும் கடந்து போகும்’ என்றும் அவர் கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கேபிக்கு பிக்பாஸ் சக போட்டியாளர்களான அர்ச்சனா, பாலாஜி, ரம்யா பாண்டியன், ஆஜித் உள்பட பலரும் விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டிருப்பதால் மற்ற போட்டியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.