ஆரியின் மேல் ஆத்திரமடையும் நிஷா: மெல்ல மெல்ல வெளியே வரும் குரூப்பிஸம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் குரூப்பிஸம் இல்லை என அர்ச்சனா குரூப்பினர் சொல்லி கொண்டு வந்தாலும் அவ்வப்போது கமல்ஹாசனும் தனித்தன்மையுடன் விளையாடுங்கள் என சுட்டிக்காட்டி கொண்டு வந்தாலும் குரூப்பினர் திருந்துவது மாதிரி தெரியவில்லை.

இந்த நிலையில் இன்றைய டாஸ்க்கில் எதிர்பாராத வகையில் அன்பு குரூப்பிலேயே பிரச்சனை வருகிறது. ரியோ மற்றும் நிஷாவின் மீது அர்ச்சனா கோபப்படுவதால் அன்பு குரூப்புக்கு எதிரானவர்களுக்கு பெரும் மகிழ்ச்சிதான்.

ஆனால் அந்த அன்பு குரூப்பை அவ்வளவு எளிதில் உடைக்க முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில் இன்றைய அடுத்த புரமோவில் ஜித்தன் ரமேஷுக்கு ஆதரவாக நிஷா பொங்குகிறார். ஆரியிடம் அவர் ரமேஷுக்கு ஆதரவாக மல்லுக்கட்டியபோது, ‘நான் ரமேஷை பற்றி கூறும்போது நிஷாவுக்கு ஏன் கோபம் வருகிறது? என்று கேள்வி எழுப்பிய ஆரி, ‘நிஷாவை பேச வேண்டாம் என நீங்கள் ஏன் கூறவில்லை என்றும் ரமேஷுக்கும் ஒரு கேள்வி எழுப்பி ஒரே நேரத்தில் இருவரையும் மடக்குகிறார்.

இதுவரை கொஞ்சம் மறைவாக இருந்த குரூப்பிஸம் தற்போது மெல்ல மெல்ல வெளியே தெரிய வருவதால் இனிவரும் நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

More News

அர்ச்சனாவை டார்ச்சர் செய்த ரியோ, நிஷா: உடைகிறதா 'அன்பு' குரூப்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய 'புதிய மனிதா' என்ற டாஸ்க்கில் மனிதர்கள் மற்றும் ரோபோ என இரு அணிகளாக பிரிந்துள்ளனர்.

விஜய்யின் செல்பியை அடுத்து டுவிட்டரில் சாதனை செய்த சூர்யா!

'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பின்போது நெய்வேலியில் தளபதி விஜய் எடுத்த செல்பி புகைப்படம் 2020ஆம் ஆண்டின் மிக அதிகமாக ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

செக்மேட் ஃபார் அர்ச்சனா: ஆரி, பாலாஜியால் உடைகிறதா அன்பு குரூப்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கால் சென்டர் டாஸ்க்கில் மூன்று இடங்கள் பெற்றவர்கள் தங்களை நாமினேஷன் இருந்து காப்பாற்றிக் கொண்டு இன்னொருவரை நாமினேட் செய்யலாம் என்று பிக்பாஸ் அறிவித்திருந்தார்

சந்தானம் அடுத்த படத்தின் கலர்புல் லுக்: இணையத்தில் வைரல்!

சந்தானம் நடிப்பில் ஜான்சன் இயக்கத்தில் வெளியான 'ஏ1' திரைப்படம் வெற்றியைப் பெற்றதை அடுத்து மீண்டும் அதே டீம் இணைந்த படத்தின் டைட்டில்  'பாரீஸ் ஜெயராஜ்'என்று வைக்கப்பட்டது

கடலில் அலைச்சறுக்கு விளையாட்டு: மகளை காப்பாற்ற சென்ற தந்தை பரிதாப பலி!

ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மகளை காப்பாற்ற சென்ற தந்தை பலியான சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது