தொலைஞ்சுபோன நிஷாவை தேடிக்கிட்டு இருக்கோம்: அர்ச்சனாவை கலாய்த்த கமல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று எவிக்சன் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக சேவ் செய்யப்பட்டவர்களின் தகவல்களை கமல்ஹாசன் அவ்வப்போது கூறி வருகிறார். நேற்று ஆரி மற்றும் ரம்யா ஆகிய இருவரும் சேவ் செய்யப்பட்ட நிலையில் இன்றும் நிஷா சேவ் செய்யப்பட்டதாக கூறுகிறார்.

நிஷா சேவ் செய்யப்பட்டதாக கூறியவுடன் நிஷாவை விட அர்ச்சனா தான் மிக அதிகமாக சந்தோசப்பட்டார். இதுகுறித்து கமல் கேள்வி எழுப்பியபோது ’நிஷாவை நாங்கள் தொலைத்து விடுவோமோ என்ற கவலையில் இருந்தேன். தற்போது நிஷா சேவ் செய்யப்பட்டதில் எங்களுக்கு மகிழ்ச்சி என்று கூறினார்.

அப்போது கமெண்ட் அடித்த கமல், ‘நீங்களும் நிஷாவை தேடி கொண்டிருந்தீர்களா? நாங்களும் தொலைந்த நிஷாவை தேடிக் கொண்டிருக்கிறோம் என்று கலாய்க்க அனைவரும் சிரிப்பதனுடன் இன்றைய இரண்டாவது புரமோ முடிவுக்கு வருகிறது.

முன்னதாக ஹெல்த் செக்கப் டாஸ்க் குறித்து கமல் கேட்பதும், அதுகுறித்த சுவாரஸ்யமான விஷயங்களை ஹவுஸ்மேட்ஸ் சொல்வதுமான காட்சிகளும் இந்த புரமோவில் உள்ளது.

More News

ஒரு நயாபைசா செலவில்லாமல் தேனிலவை கொண்டாடிய காஜல் அகர்வால்!

பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் கௌதம் என்ற மும்பை தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் கணவருடன் மாலத்தீவுக்கு தேனிலவு சென்றார் என்பதும் தெரிந்ததே 

ரஜினியின் தேவை தமிழ்நாட்டிற்கு தேவையே இல்லை: சீமான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வருவதை சமீபத்தில் உறுதி செய்த நிலையில் அவரது அரசியல் வருகை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் 

பாலாஜிக்கு குறும்படம், மெடிக்கல் லீவ் போட்ட அன்பு குரூப்: தெறிக்க வைத்த கமல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று கமல்ஹாசன் முதல் முறையாக தனது சாட்டையை சுழற்றி போட்டியாளர்களின் தவறுகளை நேருக்கு நேராக சுட்டிக் காட்டினார். குறிப்பாக சனம்ஷெட்டியிடம் பாலாஜி நடந்து கொண்ட

சூப்பர் சிங்கர் வின்னருக்கு திருமணம்: வைரலாகும் திருமண, தேனிலவு புகைப்படங்கள்!

விஜய் டிவியில் கடந்த 10 ஆண்டுகளாக ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பது சூப்பர் சிங்கர். ஜூனியர் மற்றும் சீனியர் ஆகிய இரு பிரிவுகள் மாறிமாறி நடந்து கொண்டிருந்தாலும்

கட்சி தொடங்கும் முன்னரே அதிருப்தியா? நிர்வாகிகளை சமாளிப்பாரா ரஜினி?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் தனது அரசியல் வருகையை உறுதி செய்தது மட்டுமின்றி தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனா மூர்த்தி என்பவரை நியமனம் செய்தார் என்பதும் தெரிந்ததே