ரம்யாவை அடுத்து ரியோவுக்கும் பயத்தை காட்டிய ஆரி!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து முதல் மூன்று வாரங்கள் அமைதியாக இருந்த ஆரி, நான்காவது வாரம் முதல் ’இந்த வீட்டில் நடக்கும் ஒவ்வொன்றையும் புட்டு புட்டு வைக்க போகிறேன்’ என்று சவால் விடுத்திருந்தார். அன்று தொடங்கிய ஆரியின் சாம்ராஜ்யம் இன்று வரை பிக்பாஸ் வீட்டில் நடந்து கொண்டிருக்கிறது என்பதும் ஆரியை எதிர்த்து பேசியவர்கள், அவரிடம் சண்டை போட்டவர்கள் ஒவ்வொருவராக வெளியேறி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த வாரம் எவிக்சனின்போது ரம்யாவை இறுதி கட்டம் வரை கொண்டு சென்று அவர் கண்ணில் பயத்தை காட்டியது ஆரியின் ரசிகர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பாலாவுக்கும் தண்ணிகாட்டிய ஆரி, தற்போது ரியோவுக்கும் பயத்தை ஏற்படுத்தி விட்டதாக தெரிகிறது

இன்றைய 2-வது புரோமோ விடியோவில் ஆரி குறித்து ரியோ கூறியபோது, ‘ஆரி ஒரு பயத்தை கொடுக்கின்றார். பயமுறுத்துகிறார். நீங்கள் என்னை இப்படி சொல்லி விட்டீர்கள் என்றால் மக்கள் இதற்கு என்ன கேட்பார்கள் தெரியுமா? என்று அவர் கூறுகிறார். எல்லோரும் ஒன்றாக சேர்ந்து விளையாடும் இடத்தில் நீங்கள் வரவில்லை என்று நான் மிகவும் எளிமையாக கூறியதை வைத்து பயமுறுத்துகிறார்.

ஆனால் அதற்கு நான் நூறு சதவீத உழைத்திருக்கிறேன், உழைப்பை நீங்கள் கண்டுகொள்ளவில்லை என்று அவர் கூறுகிறார். ஆரியின் குழந்தையின் மேல் நான் ஆசையாக விளையாடி கொண்டிருந்தேன். ஆனால் அவர் ஒரு மாதிரி வெறுப்பை உருவாக்குகிறார். இவர் பேசிய சில வார்த்தைகளால் எனக்கு அதிகமாக கோபம் தான் வருகிறது என்று ரியோ கேபியிடம் கூறியுள்ளார்

மொத்தத்தில் ரியோவுக்கும் ஆரி பயத்தை காட்டிவிட்டதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றார்கள்.

More News

உங்களுக்கு இவ்வளவு பெரிய மகனா? காமெடி நடிகர் மகனை பார்த்து ஆச்சரியமடைந்த ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக காமெடி கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சாம்ஸ் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தற்போது நடிகர் சாம்ஸ் மகன் யோஹான் சினிமாவில் அறிமுகமாக தயாராகி வருகிறார் 

வசந்தபாலன் இயக்கும் அடுத்த படத்தில் 'மாஸ்டர்' நடிகர்!

'ஆல்பம்' என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் வசந்தபாலன் அதன் பின்னர் 'வெயில்' 'அங்காடித்தெரு' 'அரவான்' 'காவியத்தலைவன்' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

திடீரென இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை??? முடிவு குறித்து பிசிசிஐ!!!

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அங்கு ஒருநாள் போட்டி, டி20 போட்டிகளை முடித்து கொண்டு தற்போது டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

Zombie இருப்பது உண்மையா? விளக்கம் அளிக்கும் வைரல் வீடியோ!!!

அறிவியல் பூர்வமாக இருந்தாலும் சில விஷயங்களை அவ்வளவு எளிதாக நம்பமுடியாது. அப்படியான ஒரு விஷயம்தான் ஜோம்பிஸ் (Zombie).

குட்டிச்சுவரில் அமர்ந்து பிரபுதேவாவுடன் கதைபேசும் முன்னணி நடிகர்… வைரல் புகைப்படம்!!!

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் பிரபுதேவா எப்போதும் துருதுரு வென இருப்பது வழக்கம்.