close
Choose your channels

பாலாஜியுடன் அடிதடியை தவிர்த்தேன். வேல்முருகன் கூறும் அதிர்ச்சி தகவல்!

Saturday, November 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் வெளியேறிய வேல்முருகன் உள்ளே நடந்த பல விஷயங்களை கூறியது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. குறிப்பாக பாலாஜி குறித்தும், அவர் செய்த தந்திரங்கள் குறித்தும் அவர் கூறியது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

ஒருநாள் பாலா என்னிடம் வந்து ’நீங்கள் யாரிடமும் ஓட்ட மாட்டேன் என்கிறீர்கள், நெருக்கமாக பழக மாட்டேன் என்கிறீர்கள், அதனால் உங்களுக்கு தான் நஷ்டம்’ என்றும் கூறினார். ’என்ன நஷ்டம்’ என்று நான் கேட்டபோது ’இப்போது ஆஜித்துடன் நான் நெருக்கமாக பழகி வருகிறேன். அவன் ஏதாவது தவறு செய்தால் அந்த தவறை நான் சுட்டிக் காட்ட மாட்டேன். ஆனால் என்னுடன் நெருக்கமாக பழகவில்லை. அதனால் நீங்கள் சின்ன தவறு செய்தாலும் அதை பெரிதாக சுட்டிக் காட்டுவேன்’ என்று கூறினார்

’மேலும் நான் ஒரு கிராமத்தை சேர்ந்தவன் என்பதால் என்னால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது. பாலாஜியுடன் ஏதாவது பேசி அது பிரச்சனையாகி அதனால் அடிதடியாக ஆகி விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே அவருடன் பேசுவதை தவிர்த்து வந்தேன்’ என்று கூறியுள்ளார்

’மேலும் அர்ச்சனா வந்த முதல் நாளே, பாலாஜி அவரிடம் ’தலை வலி வந்துவிட்டது என்று அவரது முன்னிலையிலேயே கூறினார். ’என்னை தலைவலி என்கிறாயா’ என அர்ச்சனா கேட்டதற்கு ’ஆமாம் உங்களை தான் தலைவலி என்கிறேன்’ அவர் கூறியதும் அனைத்து போட்டியாளர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது

’ஒரு போட்டியாளரை வெறுப்பேற்றி அவரை கோபமடைந்து செய்து வெளியேற்ற வேண்டும் என்ற தந்திரத்தை தான் பாலாஜி கடைபிடித்து வருகிறார். இது சரியான விளையாட்டு அல்ல’ என்று பாலாஜி மீது வேல்முருகன் குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.