close
Choose your channels

கேப்டன்சிக்கு தகுதியே இல்லாதவர் வீராட் கோலி… காட்டம் தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!!!

Saturday, November 7, 2020 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேப்டன்சிக்கு தகுதியே இல்லாதவர் வீராட் கோலி… காட்டம் தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!!!

 

2020 ஐபில்எல் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாக விராட் கோலி கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். ஆனால் இந்த அணி இதுவரை ஒரு கோப்பையைக் கூட வெல்லவில்லை. இந்நிலையில் நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரிலும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஃபிளே ஆப் சுற்றோடு வெளியேறி உள்ளது.

இதனால் விராட் கோலியை கேப்டன் பொறுப்பில் இருந்து அணி நிர்வாகம் நீக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் குற்றம் சாட்டி இருக்கிறார். மேலும் க்ரீக்இன்ஃபோ இணையத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “ஆர்சிபி அணியின் வெற்றி, தோல்விகளுக்கு விராட் கோலி பொறுப்பேற்க வேண்டும். எட்டு வருடங்களாக விளையாடியும் ஐபிஎல் கோப்பையை அவரால் பெற்றுத்தர முடியவில்லை.

எட்டு வருடங்களாக என்பது நீண்ட காலம். வேறு எந்த கேப்டனாவது எட்டு வருடங்கள் விளையாடி கோப்பையைப் பெற்றுத் தராமல் இருந்திருந்தால் அவரால் அதே அணியில் கேப்டனாக இருந்திருக்க முடியுமா? எனவே இதற்கு கோலி பொறுப்பேற்க வேண்டும். ஒரு வருடம் மட்டும் சரியாக விளையாடவில்லை என்பதற்காகச் சொல்லவில்லை. ஆனால் நடந்ததற்கு அவர் பொறப்பேற்க வேண்டும் என எதிர்ப்பார்க்கிறேன்.

அஸ்வினுக்கு என்ன நடந்தது என்று பாருங்கள். இரண்டு வருடங்களாக அவரால் கிங்ஸ் லெவ்ன் பஞ்சாப் அணிக்கு ஐபிஎல் கோப்பையைப் பெற்றுத்தர முடியவில்லை. உடனே அவரை நீக்கிவிட்டார்கள். டோனி, ரோகித் சர்மா, கோலி பற்றி பேசுகிறோம். டோனி 3 முறையும் ரோகித் சர்மா 4 முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார்கள்.

அதனால்தான் அவர்களால் நீண்ட நாளாக கேப்டனாக இருக்க முடிகிறது. 8 வருடங்களாக ஐபிஎல் கோப்பையைப் பெற்றுத் தந்திருக்காவிட்டால் ரோகித் சர்மாவையும் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியிருப்பார்கள். கேப்டன் என்ற முறையில் பாராட்டுகளை பெற்றுக் கொள்ளும் போது, விமர்சனங்களையும் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் எனத் தெரிவித்து உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.