close
Choose your channels

ஹவுஸ்மேட்ஸ்களை உருண்டு புரளவைத்த பிக்பாஸ்: வெற்றியை முடிவு செய்யும் 3வது அம்பயர்

Thursday, January 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. ஏற்கனவே 6 சுற்றுகள் முடிந்துவிட்ட நிலையில் இன்று 7வது சுற்று நடைபெறுகிறது

இந்த சுற்றில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் மற்ற ஆறு பேர்களுடன் உருண்டு உருண்டு பந்துகளை ஒரு வளையத்தில் இருந்து எடுத்து இன்னொரு வளையத்தில் வைக்க வேண்டும் என்றும், அதன்பின் அனைத்து பந்துகளையும் மீண்டும் முதலில் இருந்த வளையத்தில் வைக்க வேண்டும் என்றும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது

இதில் கடைசியாக முதல் இரண்டு இடங்களுக்கான போட்டியில் பாலாஜி மற்றும் கேபி ஆகியோர் இடையே நடைபெறுவது போல் தெரிகிறது. இதில் கிட்டத்தட்ட இருவருமே ஒரே நேரத்தில் டாஸ்க்கை முடித்ததுபோல் தெரிந்ததால் யார் வெற்றியாளர் என்பதை 3வது அம்பயர் முடிவு செய்வார் என்று பிக்பாஸ் அறிவிக்கின்றார். இந்த சுற்றில் வெற்றி பெற்று 7 புள்ளிகளை எடுக்க போவது பாலாவா? அல்லது கேபியா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

கடந்த ஆறு சுற்றுகளிலும் இந்த டாஸ்க்கை சரியாக விளையாடாமல் புள்ளிக்கணக்கில் கடைசி இடத்தில் உள்ள கேபி, இந்த சுற்றில் சிறப்பாக விளையாடி முதல் இரண்டு இடங்களுக்குள் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.