கமல்ஹாசன் முன் 18 போட்டியாளர்கள்: இன்றைய முதல் புரமோ!

பிக்பாஸ் ஐந்தாவது சீசன் கடந்த ஐந்து நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இதுவரை 18 போட்டியாளர்களுக்குள் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் தெரிந்ததே. குறிப்பாக பிரியங்கா, ராஜு ஜெயமோகன், இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் பிக்பாஸ் விட்டை கலகலப்பாக வைத்துள்ளார்கள் என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை இல்லாத வகையில் இந்த சீசனில் உள்ள போட்டியாளர்கள் பிக்பாஸையே கலாய்த்து வருகிறார்கள் என்பது பார்வையாளர்களுக்கு புதுமையான ஒன்றாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று சனிக்கிழமை கமல்ஹாசன் தோன்றும் நாள் என்பதால் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளார்கள். பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தபின்னர் முதல்முறையாக கமல்ஹாசனை போட்டியாளர்கள் அனைவரும் வண்ண வண்ண ஆடைகளில் ஆர்வத்துடன் காத்திருக்கும் காட்சி இன்றைய முதல் புரமோவில் உள்ளது.

மேலும் இந்த புரமோவில் கமல்ஹாசன் பேசும்போது ’வெற்றிக்கு ஒரே பார்முலா தான். தடைகளை வென்று முன்னேறுவதே. வெற்றி இறுதி இலக்கு அல்ல, தொடர் நிகழ்வுதான். அனைவருக்குமே வெற்றிகள் தொடர வேண்டும் என்பது தான் ஆசையாக இருக்கும் இவர்கள் தொடர்ந்து முன்னேறுவார்களா பார்க்கலாம்’ என்பதோடு இன்றைய முதல் புரமோ முடிவடைகிறது

பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது வாழ்க்கை கதையை கூறும்போது தங்களுக்கு கிடைத்த வெற்றி, அதற்காக தாங்கள் சந்தித்த சவால்கள், தடைகற்களை கூறிய நிலையில் கமல்ஹாசனின் இந்த உரையும் அதற்கு தொடர்புடையதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'அரண்மனை 3' படம் குறித்த ஆச்சரியமான வியாபாரம்!

பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான 'அரண்மனை 3' திரைப்படம் வரும் 14ஆம் தேதி ஆயுத பூஜை தினத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது

எதிர்நீச்சல் போட்ட சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்த சூர்யா!

சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' திரைப்படம் என்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகியுள்ள நிலையில் அவருடைய 'டாக்டர்' படம் வெற்றி பெற நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்து

திமுக ஹனிமூனில் இருக்கிறார்கள்… நடிகை குஷ்புவின் கூற்றுக்கு என்ன அர்த்தம்?

திமுக ஆட்சி தற்போது தேனிலவு காலத்தில் இருப்பதால் அவர்களைப் பற்றி ஆறு மாதங்கள் கழித்து கருத்துச் சொல்கிறேன்

ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிப்பெற்ற அணிகள் எது? ஐபிஎல் இறுதிப்போட்டி எப்போது?

கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் 2021 தொடரின் போட்டிகள் தற்போது அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது.

ஆண்ட்ரியா நடிக்கும் படத்தில் இயக்குனராகும் நடன இயக்குனர்!

தமிழ் திரையுலகில் பிரபுதேவா, ராகவா லாரன்ஸ் உள்பட ஒருசில நடன இயக்குனர்கள் இயக்குனாராகியுள்ள நிலையில் பிரபல நடன இயக்குனர் ஒருவர் இயக்குனராக அறிமுகமாகிறார்.