நீ சொல்வதை செய்ய முடியாது: கேப்டன் நிரூப் உத்தரவை எதிர்க்கும் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் வீட்டில் இந்த வார கேப்டன் டாஸ்கில் இமான் அண்ணாச்சி வெற்றிபெற்ற நிலையில் திடீரென தன்னிடம் உள்ள காயினை பயன்படுத்தி நிரூப் கேப்டனாக மாறியுள்ளார்.

ஏற்கனவே நிரூப் தனது காயினை பயன்படுத்தி ஒரு வாரம் ஆளுமையில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் கேப்டனாகி உள்ளதை அடுத்து அந்த ஆளுமையை மீண்டும் தொடர்கிறார்.

இந்த நிலையில் கேப்டன் கொடுக்கும் வேலைகளை செய்ய முடியாது என இமான் அண்ணாச்சி கூறுகிறார். எல்லா வேலைகளையும் என்னால் செய்ய முடியாது என்றும் ஏதாவது ஒரு வேலை மட்டுமே கொடுத்தால் மட்டுமே செய்ய முடியும் என்று கூறுகிறார்.

’அப்படியெல்லாம் முடியாது நான் சொல்வதை செய்துதான் ஆகவேண்டும், நான் கேப்டன் நான் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் தண்டனை கிடைக்கும்’ என்று நிரூப் மிரட்டுகிறார். மேலும் அபிஷேக்கிடம், ‘நான் உனக்கு ஒரு பவர் கொடுக்கிறேன், இந்த வாரம் முழுவதும் பெட்ரூம் முழுவதும் உனது கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள வேண்டும்’ என்று கூறுகிறார்.

’இதற்கெல்லாம் ஒத்துக்க முடியாது, வாய்ப்பே இல்லை’ என்று வருண் ஒருபக்கம் ஆவேசமாக கூறுகிறார். அப்போது நிரூப், ‘நான் கேப்டன் நான் சொல்வதை பண்ணிதான் ஆகணும்’ என மீண்டும் மீண்டும் சொல்ல, ’நீ பண்ணித்தான் ஆகணும் என்றால் பண்ண முடியாது, என்ன செய்வாய்?’ என்று இமான் அண்ணாச்சி அவர்கள் எதிர்கேள்வி கேட்பதுடன் இன்றைய 2-வது புறமோ முடிவுக்கு வருகிறது. மொத்தத்தில் நிரூப் கேப்டனாக இருக்கும் இந்த வாரம் பிக்பாஸ் வீடே பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மாரி செல்வராஜ் படத்தில் முதல்முறையாக வடிவேலு: ஹீரோ யார் தெரியுமா?

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் வடிவேலு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

'ஜெயில்' படத்துக்கு எத்தனை பிரச்சினை தான் வரும்: வசந்தபாலன் பதிவு

பிரபல இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான 'ஜெயில்' திரைப்படம் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்

நடிகை ரீமாசென்னுக்கு இவ்வளவு பெரிய மகனா? வைரல் புகைப்படம்! 

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கிய 'மின்னலே' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரீமாசென் என்பதும் அதன் பின் அவர் விஜய் நடித்த 'பகவதி' செல்வராகவன் இயக்கிய 'ஆயிரத்தில்

தேசிய விருதை அடுத்து அசுரனுக்காக மேலும் ஒரு விருதை பெறும் தனுஷ்!

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான அந்த 'அசுரன்' திரைப்படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பதும் அதுமட்டுமின்றி தனுஷ் மற்றும் வெற்றிமாறன் ஆகிய இருவருக்குமே

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரும் எஸ்.ஜே.சூர்யா: இதுதான் காரணம்!

எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் அஜித் நடித்த 'வாலி' திரைப்படம் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்த படத்திற்காக அவர் சுப்ரீம் கோர்ட் செல்ல இருப்பதாக