ஆளுமை சக்தி கொண்டு ஆட்டம் போடும் நிரூப்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களின் காயின்கள் அறிமுகம் செய்யப்பட்டது என்பதும் இந்த காயின்கள் வைத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் கூடுதல் சக்திகள் அளிக்கப்படும் என்றும் பிக்பாஸ் அறிவித்து இருந்தார் என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் கடந்த வாரம் இசைவாணிக்கு கூடுதல் சக்திகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வாரம் நெருப்பு காயினை வைத்திருக்கும் நிரூப் அவர்களுக்கு கூடுதல் சக்தி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தனது உதவியாளராக யாராவது ஒரு பெண் போட்டியாளரை நியமனம் செய்து கொள்ளலாம் என்றும் அவர் கூறும்போது மட்டும்தான் பெட் ரூமிற்கு செல்ல வேண்டும் என்றும் மீறி செல்பவர்களுக்கு தண்டனை அளிக்கலாம் உள்பட பல்வேறு நிபந்தனைகள் போட்டியாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது காயினுக்கு உரிய சக்தியை வைத்து நிரூப் ஆட்டம் போடும் காட்சிகள் இன்றைய முதல் புரமோவில் உள்ளன. இரண்டு நிமிடத்தில் பெட்ரூமை விட்டு வெளியே வராதவர்களுக்கு பாகற்காய் மற்றும் பச்சை மிளகாய் சாப்பிடும் தண்டனை அளிக்க இருப்பதாக கூறும் நிரூப் கவுண்ட்டோன் எண்ணை ஆரம்பித்ததை அடுத்து, பெட்ரூமிலிருந்து ஒரு சிலர் அவசர அவசரமாக ஓடி வரும் காட்சிகளும் உள்ளன.

மேலும் பச்சை மிளகாய் மற்றும் பாகற்காய் சாப்பிடும் தண்டனையை ஸ்ருதி, பாவனி உள்ளிட்ட ஒருசிலர் சாப்பிடும் காட்சிகளும் உள்ளன. அதேபோல் அக்ஷராவை ஒரு நாள் சாப்பிட வைப்பேன் என்று நிரூப் கூறும் காட்சிகளுடன் இன்றைய முதல் புரமோ முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'ஜகமே தந்திரம்' நடிகரின் காரை அடித்து நொறுக்கிய காங்கிரஸார்: பெரும் பரபரப்பு!

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான 'ஜகமே தந்திரம்' என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் ஒருவரின் காரை காங்கிரஸ் கட்சியினர் நடுரோட்டில் அடித்து நொறுக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எவர்கிரீன் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

பாலிவுட் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் இன்று தனது 48 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும்

புனித் ராஜ்குமார் ஆத்மா சாந்தியடைய இசைஞானி செய்த செயல்!

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த இந்திய

கொல்லிமலை ஆகாயகங்கையில் படமாகும் முதல் தமிழ்ப்படம்!

கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி அருகே முதல் முறையாக தமிழ் படம் ஒன்றின் படப்பிடிப்பு நடந்து உள்ள காட்சியின் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ஜப்பானிய வாள்சண்டை பழகும் தமிழ் நடிகை!

தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகை ஒருவர் ஜப்பானிய வாள்சண்டை வகுப்பிற்கு செல்லும் காட்சிகளில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது