close
Choose your channels

ஆளுமை சக்தி கொண்டு ஆட்டம் போடும் நிரூப்!

Tuesday, November 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களின் காயின்கள் அறிமுகம் செய்யப்பட்டது என்பதும் இந்த காயின்கள் வைத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் கூடுதல் சக்திகள் அளிக்கப்படும் என்றும் பிக்பாஸ் அறிவித்து இருந்தார் என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் கடந்த வாரம் இசைவாணிக்கு கூடுதல் சக்திகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வாரம் நெருப்பு காயினை வைத்திருக்கும் நிரூப் அவர்களுக்கு கூடுதல் சக்தி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தனது உதவியாளராக யாராவது ஒரு பெண் போட்டியாளரை நியமனம் செய்து கொள்ளலாம் என்றும் அவர் கூறும்போது மட்டும்தான் பெட் ரூமிற்கு செல்ல வேண்டும் என்றும் மீறி செல்பவர்களுக்கு தண்டனை அளிக்கலாம் உள்பட பல்வேறு நிபந்தனைகள் போட்டியாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது காயினுக்கு உரிய சக்தியை வைத்து நிரூப் ஆட்டம் போடும் காட்சிகள் இன்றைய முதல் புரமோவில் உள்ளன. இரண்டு நிமிடத்தில் பெட்ரூமை விட்டு வெளியே வராதவர்களுக்கு பாகற்காய் மற்றும் பச்சை மிளகாய் சாப்பிடும் தண்டனை அளிக்க இருப்பதாக கூறும் நிரூப் கவுண்ட்டோன் எண்ணை ஆரம்பித்ததை அடுத்து, பெட்ரூமிலிருந்து ஒரு சிலர் அவசர அவசரமாக ஓடி வரும் காட்சிகளும் உள்ளன.

மேலும் பச்சை மிளகாய் மற்றும் பாகற்காய் சாப்பிடும் தண்டனையை ஸ்ருதி, பாவனி உள்ளிட்ட ஒருசிலர் சாப்பிடும் காட்சிகளும் உள்ளன. அதேபோல் அக்ஷராவை ஒரு நாள் சாப்பிட வைப்பேன் என்று நிரூப் கூறும் காட்சிகளுடன் இன்றைய முதல் புரமோ முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.