தேவையில்லாமல் வார்த்தையை விடாதே: அமீரை எச்சரிக்கும் பிரியங்கா!

தேவையில்லாமல் வார்த்தையை விடாதே என அமீரை பிரியங்கா எச்சரிக்கும் விதமாக கூறுவது இன்றைய அடுத்த புரோமோ வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களுக்கு டிக்கெட்டு டு ஃபினாலே என்ற டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது என்பதும், தற்போது 5 போட்டியாளர்கள் இந்த டாஸ்க்கில் விளையாடி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் போட்டியாளர்களின் கட் அவுட் மீது அவர்களது குறையை கூறி கலர் திரவத்தை எறிய வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் பிரியங்கா அமீரின் கட் அவுட் மீது எறிகிறார். ’பாவனி மேல் வைத்திருக்கும் அன்பை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி இந்த நிகழ்ச்சியை வெல்வதற்காக தனக்கு சாதகமாக பயன்படுத்தி உள்ளார் அமீர் என்பதை நினைத்து நான் அவர் மேல் எறிகிறே,’ என்று காரணம் கூறுகிறார்.

இதற்கு பதிலளித்த அமீர், ‘பாவனியை எனக்கு பிடிக்கும், அவர் மேல் நான் அன்பு வைத்துள்ளேன், அது வேறு, நான் விளையாடு வந்திருக்கிறேன், இது வேறு என்று கூறியதோடு, அப்படி என்றால் நீ என் மேல் வைத்திருக்கும் அன்பு பொய்யா? என கூறினார்.

இதற்கு பிரியங்கா ’அந்த கடைசி வரியை மட்டும் நீ சொல்லாமல் இருந்திருக்கலாம் என்று கூற, ‘அது உண்மையா பொய்யா? என திரும்பத் திரும்ப அமீர் கேட்க, அப்போது பிரியங்கா ’தேவையில்லாமல் வார்த்தையை விடாதே’ என எச்சரிக்கை செய்வதோடு இன்றைய அடுத்த புரமோ முடிவுக்கு வருகிறது.

More News

நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் கட்டுப்பாட்டு பகுதி!

கொரோனா அதிகரிப்பு காரணமாகச் சென்னையில் தற்போது ஒரு இடத்தில் கட்டுப்பாட்டு

தனுஷ் - அருண் மாதேஸ்வரன் படத்தின் இசையமைப்பாளர் இவரா?

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. 

அசுர வேகத்தில் தல தோனியின் சாதனையை முறியடித்த இளம் வீரர்!

கிரிக்கெட்டை பொறுத்தவரைக்கும் விக்கெட் கீப்பரின் பணி மிகவும் பலம் பொருந்தியது. அப்படியிருந்துகொண்டு அந்த வீரர்

மனைவியை விவகாரத்து செய்தார் பிரபல தமிழ் இசையமைப்பாளர்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் தனது மனைவியை விவாகரத்து செய்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

2022இல் இந்தியாவிற்கு வரப்போகும் ஆபத்து… பீதியைக் கிளப்பும் எதிர்கால கணிப்புகள்!

எதிர்காலத்தைக் கணித்துக் கூறுபவர்களின் சில கருத்துகள் எப்போதும்