close
Choose your channels

தேவையில்லாமல் வார்த்தையை விடாதே: அமீரை எச்சரிக்கும் பிரியங்கா!

Wednesday, December 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேவையில்லாமல் வார்த்தையை விடாதே என அமீரை பிரியங்கா எச்சரிக்கும் விதமாக கூறுவது இன்றைய அடுத்த புரோமோ வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களுக்கு டிக்கெட்டு டு ஃபினாலே என்ற டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது என்பதும், தற்போது 5 போட்டியாளர்கள் இந்த டாஸ்க்கில் விளையாடி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் போட்டியாளர்களின் கட் அவுட் மீது அவர்களது குறையை கூறி கலர் திரவத்தை எறிய வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் பிரியங்கா அமீரின் கட் அவுட் மீது எறிகிறார். ’பாவனி மேல் வைத்திருக்கும் அன்பை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி இந்த நிகழ்ச்சியை வெல்வதற்காக தனக்கு சாதகமாக பயன்படுத்தி உள்ளார் அமீர் என்பதை நினைத்து நான் அவர் மேல் எறிகிறே,’ என்று காரணம் கூறுகிறார்.

இதற்கு பதிலளித்த அமீர், ‘பாவனியை எனக்கு பிடிக்கும், அவர் மேல் நான் அன்பு வைத்துள்ளேன், அது வேறு, நான் விளையாடு வந்திருக்கிறேன், இது வேறு என்று கூறியதோடு, அப்படி என்றால் நீ என் மேல் வைத்திருக்கும் அன்பு பொய்யா? என கூறினார்.

இதற்கு பிரியங்கா ’அந்த கடைசி வரியை மட்டும் நீ சொல்லாமல் இருந்திருக்கலாம் என்று கூற, ‘அது உண்மையா பொய்யா? என திரும்பத் திரும்ப அமீர் கேட்க, அப்போது பிரியங்கா ’தேவையில்லாமல் வார்த்தையை விடாதே’ என எச்சரிக்கை செய்வதோடு இன்றைய அடுத்த புரமோ முடிவுக்கு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.