ஏசி இருக்கு, சாப்பாடு போடுறாங்க, நான் இந்த வீட்டைவிட்டு போக மாட்டேன்: தாமரை செல்வியின் வெள்ளேந்திதனம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று பிரியங்கா ஒருபக்கம் பிக்பாஸை வச்சு செய்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் தாமரைச்செல்வி தனது அப்பாவித்தனத்தை மீண்டும் ஒருமுறை தெரியப்படுத்தினார்

நான் பாட்டுக்கு தெருவில் கூத்தாடி கொண்டிருந்தபோது பிக்பாஸ் நிகழ்ச்சி வாங்க என்று கூப்பிட்டதும் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறிய தாமரைச் செல்வி, ’இங்க சாப்பாடு போடறாங்க, ஏசி இருக்கு, இவ்வளவு பெரிய லைட்டு இருக்கு, இந்த வீட்டை விட்டு நான் போக மாட்டேன், என்னை யாராவது போகச்சொன்னா, எனக்கு பதிலா இமான் அண்ணாச்சி போவார் என்று கூறியது அப்பாவித்தனத்தை உச்சகட்டமாக தெரிந்தது.



மேலும் பிக்பாஸ் வீட்டிற்கு போனால் அங்கே எல்லாரும் சண்டை போடுவாங்க என்று பயமுறுத்தினார்கள் என்றும், ஆனா இங்கே வந்து பார்த்தா தான் தெரியுது நல்ல கலகலப்பாக இருக்குது என்று கூறினார். இதனை அடுத்து உங்களை அடுத்த வாரம் எலிமினேட் செய்வார்கள் என்று கேலியாக அனைவரும் கூற, ‘எலிமினேட்டா? அப்படின்னா என்ன என்று சொல்லுங்கள் என்று அவர் அப்பாவித்தனமாக கேட்டதும் நகைச்சுவையின் உச்சம்.

அதன் பிறகு எலிமினேட் என்பது வீட்டை விட்டு வெளியே செல்ல வைப்பது என்று கூற இப்பதான் நான் சந்தோஷமாக இருக்கிறேன், அது உனக்கு பிடிக்கலையா என்று மீண்டும் அப்பாவியாக கூறினார். எலிமினேட் எல்லாம் எதுவும் வேண்டாம், எல்லாரும் இந்த வீட்டிலேயே சந்தோஷமாக இருப்போம் என்று பிக்பாஸ் விதியையே தாமரை செல்வி மாற்ற முயற்சிக்கின்றார்.

மேலும் எங்க அம்மா வீட்டில் டிவி கிடையாது, நான் பிக்பாஸ் வந்ததுக்காகவே எங்க அம்மா டிவி வாங்கிட்டாங்க என்றும் அவர் சொன்னது அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கிற மாதிரி இருந்தது எங்க வீட்டுல எல்லாம் ஏசி இல்லை இங்க நல்லா குளுகுளுன்னு நல்லா இருக்கு, என்னை யாரும் வெளியே அனுப்பாதீங்க என்றார் தாமரை செல்வி கூறியது இன்னும் கொஞ்ச நேரம் அவரை பேச வைக்கலாம் என்று தான் அனைவருக்கும் இருந்தது.

மொத்தத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி என்றால் சீரியஸ் என்பதையே மறந்து விட்டு அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கும் வகையாக நேற்றைய நிகழ்ச்சி இருந்ததை பார்க்கும்போது இந்த சீசன் இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமாக செல்கிறது என்பதும், இதேபோன்று கலகலப்பாக சென்றால் மிகப் பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

இதுக்கெல்லாம் காரணம் பெத்தவங்க மட்டும்தான்: கதறி அழுத நமிதா மாரிமுத்து

கடந்த மூன்று நாட்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜாலியாகவும் கூத்தும் கும்மாளமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் போட்டியாளர்கள் தங்களுடைய சொந்த கதையை சொல்லும் காட்சிகள் மட்டுமே

என் மனைவிக்கு 100 பவுன் போட்டேன்: இமான் அண்ணாச்சியின் நெகிழ்ச்சியான கதை!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக போட்டியாளர்கள் தங்களுடைய சொந்த கதை, சோக கதையை தெரிவித்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம் அந்த வகையில் இன்று இமான் அண்ணாச்சி

யோவ் பிக்பாஸ் பெரிசு, நைட்டியை ஏன்யா திருடுற... பங்கமாய் கலாய்த்த ப்ரியங்கா!

பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை பிக்பாஸ் யார் என்று யாரும் இதுவரை பார்த்ததில்லை என்றாலும் அந்த குரலுக்கு அனைத்து போட்டியாளர்களும் மதிப்பும் மரியாதையும் கொடுப்பார்கள்.

வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

2021 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த 4 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது

தேவாலயங்களில் 3.50 லட்சம் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை… பகீர் அறிக்கை!

பிரான்ஸ் நாட்டில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் கடந்த 70 ஆண்டுகளாக 3.30 லட்சம் சிறுவர்,