close
Choose your channels

நான் இந்த வீட்டில பேசலாமா? பேசக்கூடாதா சார்? கமலிடம் அப்பாவியாய் கேட்ட தாமரை!

Sunday, November 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி 50வது நாளை நெருங்கியுள்ள நிலையில் தற்போது தான் போட்டியாளர்கள் விறுவிறுப்பாக விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றைய அடுத்த புரமோவில், ‘நான் ஓங்கும் கையாக இருப்பேன் என்று நினைப்பவருக்கு ஒரு கப்பும், இன்னொரு ஆளுக்கு சான்ஸே கிடையாது என்று ஒரு கப்பை கொடுக்க வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவிக்க தாமரை மற்றும் இமான் அண்ணாச்சிக்கு கப் கொடுக்கப்படுகிறது

ஓவராக வாய் பேசியதற்காக தாமரைக்கு இந்த கப்பை கொடுப்பதாக ராஜூ கூற, உடனே தாமரை அப்பாவியாக கமல்ஹாசனிடம், ‘இந்த வீட்டில் நான் வாய் பேசணுமா? பேச கூடாதா சார்? என்று கேட்க ’பேசணும், பேசணும் என்று கமல் கூற, அப்படி என்றால் இந்த தம்பிப்பய இதை எதற்காக கொடுத்தார்? என்று கேட்க, அதற்கு கமல், ‘என்னவாய் பேச வேண்டும் என்பது தான் முக்கியம்’ என்று கூறுகிறார்.

கமல் கூறியதன் அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல் மீண்டும் அப்பாவியாக தாமரை, ‘என்னப்பா நான் பேசினேன் என்று ராஜூவிடம் கேட்பதுடன் இன்றைய புரோமோ முடிவடைகிறது

இன்றைய நிகழ்ச்சியில் தாமரைக்கு கமல் சில அறிவுரைகளை கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.