'உங்க ஆட்டம் தப்பு'.. இரண்டாவது நாளே சண்டைக்கு கிளம்பிய ஜிபி முத்து!


Send us your feedback to audioarticles@vaarta.com


எனது கணவர் சண்டை போட மாட்டார், ஜெயித்து விட்டு வருவார் என ஜிபி முத்துவின் மனைவி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த நிலையில் இரண்டாவது நாளே ஜிபி முத்து சண்டை போட ஆரம்பித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் டிவியில் நேற்று முன்தினம் தொடங்கியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பை தொடங்கி உள்ளது. பொதுவாக ஒரு வாரம் போட்டியாளர்களுக்கு இடையே எந்தவிதமான சண்டையும் இருக்காது. ஆனால் இந்த சீசனில் இரண்டாவது நாளே சண்டை ஆரம்பித்து விட்டது.
இன்றைய முதல் புரமோவில் டீ பிரச்சனைக்காக ஒருவரை ஒருவர் போட்டியாளர்கள் வாக்குவாதம் செய்து கொண்ட நிலையில் அடுத்ததாக மீண்டும் ஒரு பிரச்சினைக்காக வாக்குவாதம் செய்து வருகின்றனர். இந்த வாக்குவாதத்தில் ’உங்க ஆட்டம் தப்பு என ஜிபி முத்து சண்டையை தொடங்கி வைக்கின்றார்.
இதனை அடுத்து மைக்கில் திடீரென ரட்சிதா கத்தும் காட்சியும் மணிகண்டன் விக்ரமினிடம் ஏதோ கோபமாக பேசும் காட்சியும் உள்ளது. மொத்தத்தில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இரண்டு அணிகளாக பிரிந்து சண்டை போடத் தொடங்கிவிட்டனர் என்பதால் இனி அடுத்தடுத்த நாட்களில் சுவராசியம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments