close
Choose your channels

பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் கைது.. பட்டம் கிடைத்த அடுத்த வாரமே சோகம்..!

Thursday, December 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் தெலுங்கு டைட்டில் வின்னர் கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட நிலையில் டைட்டில் வின்னர் ஆக அறிவிக்கப்பட்டவர் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் நடத்தி வருவது போல் பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியை நாகார்ஜுனா நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் டைட்டில் வின்னராக பல்லவி பிரசாத் என்பவர் அறிவிக்கப்பட்டார். ஆனால் குறைந்த அளவு வாக்கு வித்தியாசத்தில் அமர்தீப் என்ற போட்டியாளர் தோல்வி அடைந்ததை அடுத்து அவருடைய ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் நிகழ்ச்சி முடிந்து பல்லவி பிரசாத் ஸ்டுடியோவை விட்டு வெளியே வரும்போது அவரது காரை அமர்தீப் ரசிகர்கள் தாக்கினர். அதேபோல் அமர்தீப் காரை பல்லவி பிரசாத் ரசிகர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது,

இந்த நிலையில் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து பிக் பாஸ் டைட்டில் வின்னர் பல்லவி பிரசாத்தை கைது செய்து அவர் மீது 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் பிரிவு உட்பட 9 பிரிவுகளில் வழக்கு செய்யப்பட்டுள்ளதால் பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டம் கிடைத்த அடுத்த வாரமே அவருக்கு பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் அரசு பேருந்துகளை தாக்கும் அளவுக்கு சென்றது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.