close
Choose your channels

ரூ.15 லட்சத்திற்காக சேற்றில் கட்டிப்புரளும் ஸ்ருதி-ஜூலி!

Thursday, March 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 14 போட்டியாளர்களுடன் தொடங்கி அதன் பின் சில வைல்ட்கார்ட் போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது .

இந்த நிலையில் ஒரு போட்டியாளர் பிக்பாஸ் அளிக்கும் பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே செல்லலாம் என கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. ரூபாய் 3 லட்சம் என ஆரம்பிக்கப்பட்ட இந்த பணப் பெட்டியின் மதிப்பு படிப்படியாக உயர்ந்து தற்போது 15 லட்சம் என வந்துள்ளது.

இதனை அடுத்து இந்த பணப் பெட்டியை எடுக்க சுருதி மற்றும் ஜூலி ஆகிய இருவரும் போட்டி போடுகின்றனர். இதனை அடுத்து யார் அந்த 15 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக் கொள்ள தகுதி இருக்கிறது என்பதற்காக பல கட்டங்களாக பிக்பாஸ் போட்டி வைக்கின்றார்.

அதில் முதல்கட்டமாக தங்களுக்கென அளிக்கப்பட்டுள்ள கூடைகளில் பந்துகளை நிரப்ப வேண்டும் என்றும் அதில் யாருடைய கூடையில் அதிக பந்துகள் இருக்கிறதோ அவர்தான் வெற்றி பெறுவார் என்றும் பிக்பாஸ் அறிவிக்கின்றார். இதனை அடுத்து ஜூலி மற்றும் சுருதி ஆகிய இருவரும் சேற்றில் புரண்டு பந்துகளை தங்களுடைய கூடையில் போட முயற்சிக்கின்றனர். இந்த போட்டியின் இறுதியில் சுருதி வெற்றி பெற்றதாக பிக்பாஸ் அறிவிக்கின்றார். இருப்பினும் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று 15 லட்சம் மதிப்புள்ள பணப்பெட்டியை எடுப்பவர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.