'பிகில்' பட வழக்கின் தீர்ப்பு குறித்த அதிரடி தகவல்!

  • IndiaGlitz, [Thursday,October 17 2019]

விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய ‘பிகில்’ திரைப்படம் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என்றும் இந்த படத்தின் ரிலீசுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் உதவி இயக்குனர் செல்வா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

உதவி இயக்குனர் செல்வா ஏற்கனவே கீழமை நீதிமன்றத்தில் இதுகுறித்த வழக்கு தாக்கல் செய்த நிலையில் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்தே தற்போது ஐகோர்ட்டில் அவர் மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கீழமை நீதிமன்றம் இந்த வழக்கை வாபஸ் பெறவும், ஐகோர்ட்டை அணுகவும் எதன் அடிப்படையில் அனுமதி அளித்தது? என கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இருப்பினும் இந்த வழக்கின் தீர்ப்பு அக்டோபர் 25க்குள் அளிக்கபப்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

அப்பா-அம்மாவுக்காக சூர்யா-கார்த்தி செய்த வியப்பான விஷயம்!

கோலிவுட் திரையுலகில் பிஸியான நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி என்பது தெரிந்ததே. ஒரு படம் முடிவடைதற்குள் அடுத்த படத்தில் கமிட்டாகி, அடுத்தடுத்து

'பிகில்' ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

வரும் தீபாவளி தினத்தில் விஜய்யின் 'பிகில்' மற்றும் கார்த்தியின் 'கைதி' ஆகிய இரண்டு திரைப்படங்கள் மட்டுமே வெளியாக உள்ள நிலையில் இரண்டு திரைப்படங்களும் சென்சார் சான்றிதழ் பெற்று

திமுக, கமல் கட்சியையும் தடை செய்ய வேண்டும்: பிரேமலதா

ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமானுக்கு அவருக்கு நெருக்கமானவர்களே கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்

அமிதாப், சூர்யா பணியை தொடரும் ராதிகா!

'கௌன் பனேகா குரோர்பதி' என ஹிந்தியில் அமிதாப் பச்சனும், 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்று தமிழில் சூர்யாவும் நடத்திய நிகழ்ச்சி குறித்து அனைவரும் அறிந்ததே.

மும்பை பப்பில் ஆட்டம் போட்ட மீராமிதுன்: நெட்டிசன்கள் விளாசல்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நான்கு வாரங்கள் மட்டுமே மீராமிதுன் இருந்தபோதிலும் கிட்டத்தட்ட அனைவரிடமும் பிரச்சனை செய்துவிட்டார். குறிப்பாக சேரன் தவறான நோக்கத்துடன்