'பிகில்' பெயரில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு: விஜய்க்கு பெருமை சேர்த்த ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Friday,August 16 2019]

தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடிய நிலையில் விஜய் ரசிகர்கள் நேற்றுமுதல் ஒரு சமுதாய விழிப்புணர்வை பணியை ஆரம்பித்துள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது

'பிகில் படத்தின் பெயரில் தளபதி விஜய் மக்கள் பேரவை சார்பில் விஜய் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் மரங்களை நட்டு வருகின்றனர். #BIGILTreePlantingChallenge என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு இதுகுறித்த விழிப்புணர்வு சமூக வலைதளங்களிலும் ஏற்படுத்தி வருகின்றனர்.

மரம் மண்ணின் வரம்! மரம் வளர்ப்பதே மனித அறம் என்ற வாசகம் இடம்பெற்றுள்ள விஜய் ரசிகர்களின் போஸ்டர்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 'பிகில் படத்தை பிரபலப்படுத்தும் வகையிலும், மரம் வளர்ப்பது குறித்த சமுதாய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையிலும் விஜய் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மரங்களை நட்டு வருவதாகவும் 'பிகில்' படம் வெளியாகும் முன்னரே லட்சக்கணக்கான மரங்களை நட வேண்டும் என்பதே விஜய் ரசிகர்களின் நோக்கமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த பணி விஜய்க்கு அவரது ரசிகர்கள் பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

நேற்றைய 73 வது சுதந்திர தினத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பணி இந்த வருடம் முழுவதும் நடைபெறும் என்றும் விஜய் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே ஒரு கோடி மரங்கள் நடவேண்டும் என்ற இலக்கை நோக்கி நடிகர் விவேக் தமிழகம் முழுவதும் மரங்கள் நட்டு வரும் நிலையில், விஜய் ரசிகர்களும் மரங்கள் நட்டு வருவது தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். இந்த பணி தொடர வேண்டும் என்றும் இதேபோல் மற்ற நடிகர்களின் ரசிகர்களும் அவர்களது விருப்பத்திற்குரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளிவரும்போது மரங்கள் நடுவதை ஒரு வழக்கமாக வைத்திருந்தால் தமிழகம் விரைவில் பசுமையாக மாறி விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தற்கொலை! அதிர்ச்சி தகவல்

கடந்த 1988ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய தமிழகத்தை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் விபி சந்திரசேகர் நேற்றிரவு

'பிகில்' படப்பிடிப்பில் கலந்து கொண்ட அட்லியின் மனைவி!

தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கி வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை வந்து விட்டது என்பது அனைவரும் அறிந்ததே.

வனிதாவை ரவுண்டு கட்டும் ஆண்கள்: லாஸ்லியாவும் ஒத்துழைப்பு

பிக்பாஸ் வீட்டில் வனிதா வந்த பின்னர் ஒரு பிரளயமே நடந்து கொண்டிருக்கும் நிலையில் முதலில் அபிராமி அடுத்ததாக மதுமிதா ஆகிய இருவரும் பொங்கி எழுந்தனர்.

கிருஷ்ணர், அர்ஜுனன் ஒப்பீடு குறித்து ரஜினிகாந்த் விளக்கம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டார்.

ஜீவா நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்

நடிகர் ஜீவா நடித்த 'கீ' மற்றும் 'கொரில்லா' ஆகிய திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியான நிலையில் அவர் தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார்.