மீண்டும் கமல் கட்சிக்கே சென்ற பாஜக பிரபலம்!

கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியில் இருந்த விலகிய பிரபலம் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாஜகவுக்கு தாவிய நிலையில் தற்போது மீண்டும் பாஜகவிலிருந்து கமல் கட்சிக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்தவர் அருணாச்சலம். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் பாஜகவிலிருந்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:

மக்கள்‌ நீதி மய்யத்தின்‌ முன்னாள்‌ நிறுவனப்‌ பொதுச்‌ செயலாளர்‌ திரு. அருணாச்சலம்‌ அவர்கள்‌ நமது தலைவர்‌, நம்மவர்‌ திரு. கமல்ஹாசன் அவர்களை நேரில்‌ சந்தித்து இன்று நமது கட்சியில்‌ மீண்டும்‌ இணைந்தார்‌.

அரசியலில்‌ ஆழங்காற்பட்ட அனுபவம்‌ மிக்க திரு. அருணாச்சலம்‌ தமிழக அரசியலில்‌ ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த நம்மவர்‌ அவர்களால்தான்‌ முடியும்‌ என்பதை உணர்ந்து களப்பணியாற்றியவர்‌. அவர்‌ மீண்டும்‌ நம்மோடு இணைவது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அவரை மனதார வாழ்த்தி வரவேற்கிறேன்‌.

வருகிற நாடாளுமன்றத்‌ தேர்தலில்‌ மக்கள்‌ நீதி மய்யத்தினை பெருவெற்றியடையச்‌ செய்யவேண்டுமெனும்‌ உயரிய நோக்கத்துடன்‌ உழைக்க வந்திருக்கும்‌ திரு. அருணாச்சலம்‌ அவர்களோடு மக்கள்‌ நீதி மய்யத்தின்‌ நிர்வாகிகளும்‌, அனைத்து உறுப்பினர்களும்‌ ஒத்துழைத்து நமது கட்சியின்‌ வளர்ச்சிக்கும்‌ வெற்றிக்கும்‌ உதவவேண்டுமென அன்புடன்‌
கேட்டுக்கொள்கிறேன்‌.

More News

கபட நாடக வேஷதாரர்.. விக்ரமன் கேட்ட கேள்விக்கு திணறிய தனலட்சுமி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல் கேட்ட கேள்விக்கு தனலட்சுமி பதில் அளித்துக் கொண்டிருந்தபோது விக்ரமன் கேட்ட கேள்வியால் திணறிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

எத்தனை வேஷம் போட்டாலும் உண்மை வெளியே வரும்: பிக்பாஸ் கமல்ஹாசன்

பிக்பாஸ் நிகழ்ச்சி 61 நாட்கள் முடிந்து இன்று 62வது நாள் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் கமல்ஹாசனின் எபிசோடு என்பதால் இன்றைய தினம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தோல்வி அடைந்த பிரேசில் அணி நெய்மருக்கு ஆறுதல் கூறிய குரோஷியா வீரரின் மகன்: நெகிழ்ச்சி வீடியோ

உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பிரேசில் மற்றும் குரோஷிய அணிகளுக்கிடையிலான காலிறுதிப் போட்டி நேற்று நள்ளிரவு நடந்தது.

'சங்கு சக்கர கண்ணு', 'புஷ்பா' பாடகியின் முதல் தமிழ்ப்பாடல்: வீடியோ வைரல்

 'புஷ்பா' படத்தில் இடம்பெற்ற சமந்தா பாடலை பாடிய பாடகி தற்போது முதன் முதலாக தமிழில் பாடி உள்ளதை அடுத்து அந்த பாடல் குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

நீலிமா ராணியின் க்யூட் குழந்தைகள் புகைப்படம்.. மூத்த மகள் இவ்வளவு வளர்ந்துவிட்டாரா?

தமிழ் திரைப்பட மற்றும் சீரியல் நடிகை நீலிமா ராணியின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அவருடைய மூத்த மகள் எவ்வளவு பெரியவராக வந்து விட்டாரா?