close
Choose your channels

கபட நாடக வேஷதாரர்.. விக்ரமன் கேட்ட கேள்விக்கு திணறிய தனலட்சுமி!

Saturday, December 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல் கேட்ட கேள்விக்கு தனலட்சுமி பதில் அளித்துக் கொண்டிருந்தபோது விக்ரமன் கேட்ட கேள்வியால் திணறிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 62 நாளாக நடைபெற்று கொண்டிருக்கும் போது இன்று இரண்டாவது புரமோவில், ‘60 நாள் ஆகியும் தன் அசல் முகத்தைக் காட்டவே காட்டாமல் இருக்கும் கபட நாடக வேடதாரி யார் என்ற கேள்வியை கமல்ஹாசன் கேட்டார். இதனை அடுத்து ரக்சிதாவை ராம், மணிகண்டன் உள்பட ஒரு சிலர் கூறினர்.

இதனை அடுத்து விக்ரமனை ஆயிஷா மற்றும் தனலட்சுமி கூறினார்கள். தனலட்சுமி, விக்ரமன் குறித்து கூறிய போது, ‘மனதில் என்ன தோன்றுகிறதோ அதை பேசாத கேரக்டர் விக்ரமன் என்றும், வெளியிலும் அவர் அப்படித்தான் இருப்பார் என்று நினைக்கிறேன்’ என்று கூறினார்.

உடனே விக்ரமன் குறுக்கிட்டு, ‘வெளியில் என்னை பார்த்து இருக்கின்றீர்களா? என்று கேட்க வெளியில் என்னை நீங்க எத்தனை தடவை பார்த்தீர்கள் என்று மீண்டும் கேட்க அதற்கு பதில் சொல்ல முடியாமல் தனலட்சுமி திணறும் காட்சியுடன் இன்றைய இரண்டாம் புரமோ முடிவு பெறுகிறது.

மொத்தத்தில் இன்றைய கமல்ஹாசன் கேள்விக்கு போட்டியாளர்களின் பதில் சுவராஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.