close
Choose your channels

புளூவேல் கேமிற்கு அடிமையான சென்னை கல்லூரி மாணவி: 7வது மாடியில் இருந்து குதித்ததால் பரபரப்பு

Wednesday, August 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிறுவர், சிறுமிகளின் உயிர்களை பறிக்கும் ஆபத்தான் ஆன்லைன் கேம் புளுவேல் கேம் என்பதும் இந்த ஆபத்தான விளையாட்டால் சமீபத்தில் திருவனந்தபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் பலியானார் என்று வெளிவந்த செய்தியையும் சமீபத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரும் இந்த புளூவேல் கேமிற்கு அடிமையாகியுள்ளதாகவும், இந்த கேமின் உச்சகட்டமான தற்கொலைக்கும் அவர் முயன்றதாகவும் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கடந்த சில நாட்களாக புளுவேல் கேமிற்கு அடிமையாக அதன் இறுதி டாஸ்க் ஆன தற்கொலை வரை வந்துள்ளார். பின்னர் நேற்றிரவு அவர், தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே விழுந்துள்ளார். இதனால் படுகாயம் அடைந்த அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இனியும் தாமதிக்காமல் மத்திய மாநில அரசுகள் உடனடியாக இந்த கேமை தடை செய்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.