தோல்வி அடைந்தாலும் மக்களின் மனங்களை வென்ற இந்திய வீராங்கனைகள்

  • IndiaGlitz, [Monday,July 24 2017]

நேற்று நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாலும் கடைசி வரை வெற்றிக்காக போராடிய வீராங்கனைகளின் மன உறுதியால் கிரிக்கெட் ரசிகர்களின் மனங்களை வென்றுவிட்டனர்.

இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது அரிதான விஷயமாக இருந்தாலும் வெற்றியின் விளிம்பு வரை இந்திய அணியை கொண்டு சென்ற கேப்டன் மிதாலி ராஜூக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஜூனியர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வுக் குழு தலைவர் சாமுண்டீஸ்வர்நாத் அவர்கள் மிதாலிக்கு பி.எம்.டபிள்யூ கார் ஒன்றை பரிசளிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

அதேபோல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அரையிறுதி போட்டியில் 171 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டவரும், இறுதி போட்டியில் 51 ரன்கள் எடுத்தவருமான ஹர்மன்ப்ரீத் கவுர் அவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்குவதாக பஞ்சாப் மாநில அரசு தெரிவித்திருந்தது. மேலும் அவருக்கு பஞ்சாப் காவல்துறையில் பணி வழங்குவதாக அந்த மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் அறிவித்த நிலையில் தற்போது அவர் பஞ்சாப் காவல்துறையில் டிஎஸ்பி-யாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்திய அணி வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி, பிரபல கிரிக்கெட் வீரர்கள் சச்சின், சேவாக் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் அக்சயகுமார் நேற்றைய போட்டியை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேரடியாக பார்த்து ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சென்னை கல்லூரி மாணவிகள் 105 பேர் திடீரென மருத்துவமனையில் அனுமதி

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு கல்லூரியில் விடுதியில் தங்கியிருந்த 105 மாணவிகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...

மலையாள நடிகை பாலியல் வழக்கு விவகாரம்: திலீப் ஜாமீன் மனு குறித்து கேரள ஐகோர்ட் முக்கிய உத்தரவு

கடந்த பிப்ரவரி மாதம் பிரபல மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு உள்ளான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் திலீப்பின் ஜாமின் மனு இன்று மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கோபத்தில் வெளியேறினாலும் குணத்தில் தங்கம் என்று நிரூபித்த தனுஷ்

தனுஷ் நடித்த 'விஐபி 2' திரைப்படம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் முழு வீச்சில் நடந்து வருகிறது...

உனக்கே உன்மேலே வெறுப்பு வரல்லையா? திருந்தாத ஜூலிக்கு ஓவியா கேள்வி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக ஜூலியின் பச்சோந்திதனம் வெளிப்பட்டும் அவர் திருந்தும் ஜென்மமாக தெரியவில்லை. நேற்றைய நிகழ்ச்சியில் அந்த ஐந்து வினாடி வீடியோ வேண்டும் என்று அடம்பிடித்து தன்னுடைய தவறை ஒப்புக்கொள்ளாமல் இருந்தார் ஜூலி...

துப்புரவுப் பணியாளர்கள் குறித்த படத்துக்கு விஜய் சேதுபதி செய்த பெரிய உதவி

மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியாகியுள்ள 'விக்ரம்-வேதா' படத்திற்கு நல்ல வரவேற்பும் வசூலும் கிடைத்துள்ளது...