close
Choose your channels

உனக்கே உன்மேலே வெறுப்பு வரல்லையா? திருந்தாத ஜூலிக்கு ஓவியா கேள்வி

Monday, July 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக ஜூலியின் பச்சோந்திதனம் வெளிப்பட்டும் அவர் திருந்தும் ஜென்மமாக தெரியவில்லை. நேற்றைய நிகழ்ச்சியில் அந்த ஐந்து வினாடி வீடியோ வேண்டும் என்று அடம்பிடித்து தன்னுடைய தவறை ஒப்புக்கொள்ளாமல் இருந்தார் ஜூலி.

பின்னர் அனைவரும் அறிவுரை கூறி கமல்ஹாசன் முன் மன்னிப்பு கேட்க வைத்தனர். ஆனால் அந்த மன்னிப்பு கூட அவர் மனம் திருந்தி கேட்டதாக தெரியவில்லை. ஏதோ பெயருக்கு கேட்ட மாதிரியே இருந்தது.

இந்த நிலையில் இன்றைய புரமோ வீடியோவில், எல்லாருமே சொந்தங்களுக்காக பொய் சொல்லத்தான் செய்வார்கள். நானும் என் சொந்தங்களுக்காகத்தான் பொய் சொன்னேன். அது தப்பில்லையே! என்று மீண்டும் தனது தவறை நியாயப்படுத்தும் வகையில் பேசுவதாக வந்துள்ளது.

அதற்கு ஓவியா, உனக்கே உன்மேலே வெறுப்பு வரல்லையா! சத்தியமா சொல்லு? என்று கூற அதை கண்டுகொள்ளாமல் சிரித்தபடி கேலியாக பாட்டு பாடுகிறார் ஜூலி. அப்போது ஓவியா, எப்பவுமே பாடிகார்டுக்கு ஆள் இருக்காது! என்று அவர் பாணியில் அசால்ட்டாக கூறிவிட்டு செல்கிறார்.

ஜூலி திருந்தும் ஜென்மமில்லை என்றும், அவரை உடனடியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதே சமூக வலைத்தள பயனாளிகள் மற்றும் நேயர்களின் எண்ணமாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.