பாபிசிம்ஹா தயாரிக்கும் முதல் படம்

  • IndiaGlitz, [Saturday,January 16 2016]
'ஜிகர்தண்டா' படத்தில் தேசிய விருது பெற்ற பின்னர் பாபிசிம்ஹாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்திருப்பதை நாம் ஏற்கனவே பலமுறை பார்த்திருக்கின்றோம். அவர் கிட்டத்தட்ட அரை டஜன் படங்களுக்கும் மேல் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகராக மட்டுமின்றி தற்போது ஒரு படத்தை அவரே சொந்தமாக தயாரித்து நடிப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

பாபிசிம்ஹா தயாரித்து நடிக்கும் திரைப்படத்திற்கு 'வல்லவனுக்கும் வல்லவன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை விஜய தேசிங்கு என்பவர் இயக்கிவருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தற்போது வெளிவந்துள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் உறுதி செய்கின்றது.
மேலும் பாபிசிம்ஹாவுக்கு கோலிவுட் திரையுலகில் ஒரு சிறப்பான இடத்தை பெற்றுக்கொடுத்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பாபிசிம்ஹா தயாரிப்பாளராக மாறியதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஜீவா படத்தில் இணையும் 'தெறி' நடிகை

விஜய்யின் 'தெறி' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகை சுனைனா. இவர் தற்போது ஜீவா, பாபிசிம்ஹா...

'ரஜினிமுருகன்' திரைவிமர்சனம்

சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே அதிக பிரச்சனைகளை சந்தித்து வெளிவந்த படம் இதுதான். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என்ற படத்தை கமர்ஷியலாக கொடுத்த இயக்குனர் பொன்ராம், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து இயக்கிய படம்தான் 'ரஜினிமுருகன்' இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்....

'தாரை தப்பட்டை' திரைவிமர்சனம்

சேது, நந்தா, பிதாமகன், பரதேசி என பார்வையாளர்களை மிரட்டும் அளவுக்கு படமெடுத்து தேசியவிருதும் பெற்றவர் இயக்குனர் பாலா...

'தெறி' படம் குறித்து அட்லி வெளியிட்ட புதிய தகவல்கள்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் இயக்குனர் அட்லி ஒரு பிரபல பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில்...

விஜய்சேதுபதியின் 'சேதுபதி' ஆடியோ ரிலீஸ் தேதி

விஜய்சேதுபதி நடித்த 'நானும் ரெளடிதான்' படம் சூப்பர் ஹிட் ஆகியதால் இந்த ஒரே வெற்றியின் மூலம் அவர் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்துவிட்டதாக கூறப்படுகிறது....