close
Choose your channels

பாபிசிம்ஹா தயாரிக்கும் முதல் படம்

Saturday, January 16, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
'ஜிகர்தண்டா' படத்தில் தேசிய விருது பெற்ற பின்னர் பாபிசிம்ஹாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்திருப்பதை நாம் ஏற்கனவே பலமுறை பார்த்திருக்கின்றோம். அவர் கிட்டத்தட்ட அரை டஜன் படங்களுக்கும் மேல் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகராக மட்டுமின்றி தற்போது ஒரு படத்தை அவரே சொந்தமாக தயாரித்து நடிப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

பாபிசிம்ஹா தயாரித்து நடிக்கும் திரைப்படத்திற்கு 'வல்லவனுக்கும் வல்லவன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை விஜய தேசிங்கு என்பவர் இயக்கிவருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தற்போது வெளிவந்துள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் உறுதி செய்கின்றது.
மேலும் பாபிசிம்ஹாவுக்கு கோலிவுட் திரையுலகில் ஒரு சிறப்பான இடத்தை பெற்றுக்கொடுத்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பாபிசிம்ஹா தயாரிப்பாளராக மாறியதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.