பிரபல நடிகையின் சொத்துக்கள் முடக்கம்… அமலாக்கத்துறை அதிரடி!

பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் ரூ.7 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இவர் மோசடி புகாரில் சிக்கிய சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் நெருங்கிய தொடர்புடன் இருந்ததாக கடந்த ஆண்டு குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து அவருடைய சொத்துகள் முடக்கப்பட்டு இருக்கிறது.

பெங்களூரை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் முக்கிய அரசியல்வாதிகளுடன் தனக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி பலரிடம் மோசடி செய்ததாக கடந்த ஆண்டு புகார் எழுந்தது. மேலும் இரட்டை இலை சின்னத்தை டிடிவி தினகரனுக்கு மீண்டும் வாங்கித் தருவமாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் சுகேஷ் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணையைத் தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கும் சுகேஷ் சந்திரசேகருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் பல்வேறு விலையுயர்ந்த பரிசுப்பொருட்களை அவர் நடிகைக்கு கொடுத்தாகவும் விசாரணையில் தெரியவந்தது.

இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை கைது செய்து விசாரணை செய்தனர். இந்நிலையில் தற்போது சுகேஷ், ரான்பாக்ஸி எனும் நிறுவனத்தின் உரிமையாளரிடன் ரூ.200 மோசடி செய்துள்ளதாகவும் அதில் 5.71 கோடி ரூபாய் அளவிலான பரிசுப்பொருட்களை நடிகை ஜாக்குலினுக்கு கொடுத்தாகவும் விசாரணையில் தெரிவித்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் நடிகையின் சேமிப்பு கணக்கில் வைக்கப்பட்டு இருந்த 7 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கியுள்ளனர்.

More News

ஜடேஜா பதவி விலகலுக்கு இதுதான் காரணமா? வைரலாகும் அதிர்ச்சி பின்னணி!

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறாத நிலையில் தற்போது 15 ஆவது சீசன்

மார்பக அறுவை சிகிச்சைக்கு பின் பிரபல நடிகை சென்றது எங்கே தெரியுமா? வைரல் வீடியோ

சமீபத்தில்  மார்பக அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரபல நடிகை ஒருவர்  அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சென்ற இடம் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

'தல' அஜித் பிறந்த நாளில் 'தல' தோனி எடுத்த அதிரடி முடிவு!

தல அஜித் பிறந்தநாள் தல தோனி எடுத்த அதிரடி முடிவை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் .

நடிகை சாய்பல்லவிக்கு திருமணமா? அவரே அளித்த விளக்கம்!

நடிகை சாய் பல்லவிக்கு திருமணம் என்றும் அதனால் தான் அவர் புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகவில்லை என்றும் சமூக வலைதளங்கள் மற்றும் ஒருசில ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும்

சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் அஜித்-விஜய்: பிரபல இயக்குனர் திட்டம்!

 அஜித் நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரையும் இணைத்து நடிக்கவைக்க ஆசைப்படுவதாக பிரபல இயக்குனர் ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.