close
Choose your channels

பிரபல நடிகையின் சொத்துக்கள் முடக்கம்… அமலாக்கத்துறை அதிரடி!

Sunday, May 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் ரூ.7 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இவர் மோசடி புகாரில் சிக்கிய சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் நெருங்கிய தொடர்புடன் இருந்ததாக கடந்த ஆண்டு குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து அவருடைய சொத்துகள் முடக்கப்பட்டு இருக்கிறது.

பெங்களூரை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் முக்கிய அரசியல்வாதிகளுடன் தனக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி பலரிடம் மோசடி செய்ததாக கடந்த ஆண்டு புகார் எழுந்தது. மேலும் இரட்டை இலை சின்னத்தை டிடிவி தினகரனுக்கு மீண்டும் வாங்கித் தருவமாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் சுகேஷ் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணையைத் தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கும் சுகேஷ் சந்திரசேகருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் பல்வேறு விலையுயர்ந்த பரிசுப்பொருட்களை அவர் நடிகைக்கு கொடுத்தாகவும் விசாரணையில் தெரியவந்தது.

இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை கைது செய்து விசாரணை செய்தனர். இந்நிலையில் தற்போது சுகேஷ், ரான்பாக்ஸி எனும் நிறுவனத்தின் உரிமையாளரிடன் ரூ.200 மோசடி செய்துள்ளதாகவும் அதில் 5.71 கோடி ரூபாய் அளவிலான பரிசுப்பொருட்களை நடிகை ஜாக்குலினுக்கு கொடுத்தாகவும் விசாரணையில் தெரிவித்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் நடிகையின் சேமிப்பு கணக்கில் வைக்கப்பட்டு இருந்த 7 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.