பெரிய படத்தின் இயக்குனர் படுக்கைக்கு அழைத்தார்: பிரபல நடிகையின் 'மீடு' குற்றச்சாட்டு
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை ஒருவர் தன்னை பெரிய பட இயக்குனர் ஒருவர் படுக்கைக்கு அழைத்துதாக ’மீடு’ குற்றச்சாட்டு சுமத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பல நடிகைகள் ’மீடு’ குற்றச்சாட்டை கூறியுள்ள நிலையில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிராய்ச்சி தேசாய் ’மீடு’ குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.
பாலிவுட்டில் ’லைஃப் பார்ட்னர்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பிராய்ச்சி தேசாய். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’ஒரு பெரிய படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் அந்த படத்தின் இயக்குனர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும் படுக்கையை பகிர்ந்து பெரிய படத்தில் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை என தான் மறுத்து விட்டதாகவும் கூறினார்.
படுக்கையை பகிர நான் ஒப்புக் கொண்டிருந்தால் பல பெரிய படங்களில் நடித்து இருப்பேன் என்றும் ஆனால் அதற்கு தனக்கு விருப்பமில்லை என்றும் குறைவான படங்களில் நடித்தாலும் நல்ல கதையம்சம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து பிராய்ச்சி தேசாய் கூறிய அந்த பெரிய படத்தின் இயக்குனர் யார் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்,
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments